வெள்ளி, 18 நவம்பர், 2016

பிரிவுக்குப் பின் புலம்பல்தானோ...

காற்றே சாட்சி....

வ்வொரு முறையும்
வீசுகின்ற காற்று
என்னைக் கடந்து 
செல்லும்போது...
உன் நினைவுகளையும்,
உன் சுவாசத்தையும்
என்னிடம் கொடுத்து
விட்டுதான் செல்கிறது...
நீ என்னைப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
என்னை விட்டு
யாராலும் பிரிக்க முடியாது
என்பதற்கு காற்றே சாட்சி...


Ajai Sunilkar Joseph


அடங்கிப்போன துடிப்பு....

யிர் நீத்த பறவையாக
உன் உறவை இழந்த
என் இதயத்துடிப்பு
அடங்கிப் போனதடி(டா)...

Ajai Sunilkar Joseph


தொலைத்து விட்டாள்...


ன்னைப் பார்த்த 
முதல் நாளிலே...
என்னை உன்னிடம்
கொடுத்து விட்டேனே...
நான் உனக்கு
கொடுத்த என்னை
நீ தொலைத்தாயோ...!
உன்னிடம் பலமுறைத்
தேடிப் பார்த்தும் என்னைக் 
காணவில்லையே...!


Ajai Sunilkar Joseph



கிறுக்கனின் வலிகள்(வரிகள்)....


நீ எனக்கு கொடுத்த
வலிகளை தினம் தினம்
வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் காகிதத்தில்...
இந்த கிறுக்கனின் 
வரிகளும் , வலிகளும்
என்றாவது ஓர் நாள்
உனக்கு புரியும் என்று...


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

6 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!