ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உன்னை பிரிந்தால் நானில்லை

என்னை நீ விட்டு விடாதே

என்று உன்னிடம் சொல்ல

எனக்கு உரிமையில்லை...

என்னை நீ விட்டு சென்றால்

என்னுயிரும் என்னை விட்டு

விடும் என்பதை மறவாதே...!

நீ மறந்தாலும் பரவாயில்லை

உன்னை பிரிந்தால் நானுமில்லை...

எனக்கு அகிலமே நீதானே

உன்னை பிரிந்தால்

நானில்லைதானே...!

-Ajai Sunilkar Joseph

வியாழன், 28 ஜனவரி, 2016

ஒரு முறை சுவாசம் கொள்

நீயும் நெருங்கி வந்தாய்...
நானும் நெருங்கி வந்தேன்...
நீயோ விலகி சென்றாய்
நானோ விலகவில்லை...
நிகராக எனது உயிரை
நான் விலகி விட்டேன்...
விலகிய உயிரோ உன்னை
சுற்றியே வருகின்றது...
உன் சுவாசத்திலாவது
சேர்ந்து விடலாம் என்று...
ஒரு முறை சுவாசம் கொள்
நிம்மதியாக விலகி செல்வேன்...

-Ajai Sunilkar Joseph

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

எம்மொழி அது செம்மொழி

செந்தமிழ் நாட்டில் பிறந்து விட்டு...
நம்மொழி செந்தமிழை மறந்து விட்டு...
தமிழை அடி நாக்கில் புதைத்து விட்டு...
ஆங்கிலத்தை நுனிநாக்கில் விதைத்து விட்டு...
நம் தமிழை முற்றிலும் மறந்து விட்டு...
மழலை வாயிலும் ஆங்கிலத்தை நுழைத்து விட்டு...
செந்தமிழை மறைக்கும் தமிழர்களே...
எந்த மொழியினராயினும் வந்து பிழைக்கும்
செந்தமிழ் நாட்டில் தமிழ் பேச நாதியில்லையோ...?
தொலையும் மொழியா நம்மொழி...?
தொலைத்து விட்டால் நானும் நீயும் தமிழரா...?
செம்மொழி பேசிய வாயிலெல்லாம்
செந்தமிழ் புதைந்தேதான் போனதோ...?
வெள்ளையன் விதைத்த ஆங்கிலம்தான் துளிர் விடுதோ...?
துளிர் விடும் மொழியெல்லாம் செந்தமிழை தகர்ப்பதில்லை...
தமிழ் தமிழ் அது என் உயிர் மொழி...
தமிழில்லாமல் நானில்லை...

-அஜய் சுனில்கர் ஜோசப்

காதல் தாகம் தீர்த்த தாரகை

எந்தன் காதல் தாகம் தீர்த்த
தாரகை உந்தன் தனிமை
தாகம் தீர்க்க எந்தன் கண்ணீர்
தாரைகள் போதுமோ...?
நீ கொடுத்த எந்தன் தனிமை
தாகம் தீர்க்க துணை என்று
யாரும் வேண்டாமே...
துணை ஒன்று வேண்டும்
என்றால் நீ மட்டும் போதும்...
காதல் தாகம் அதை
நீதான் கொடுத்தாய்...
தனிமை தாகம் அதையும்
நீயே கொடுத்தாய்...

-Ajai Sunilkar Joseph

சனி, 23 ஜனவரி, 2016

ஏக்கம் தந்த ஏந்திழை

ஏக்கம் தந்த ஏந்திழைக்காக
ஏகாந்தமாக அவள் காதலை
எதிர்பார்த்து காத்திருந்தேன்...
பனித்துளிக்காக மலர்ந்த
மலர் போல மலர்ந்திருந்தேன்...
பனித்துளியை மறைத்து செல்லும்
கதிரவன் போல வந்தாள்...
காதல் இல்லை என்றாள்...
கண்களும் தானாய் கலங்கியது...
காத்திருந்த தவத்திற்கு
ஏமாற்றம்தான் வரமானதோ...!

By.... -Ajai Sunilkar Joseph

வியாழன், 21 ஜனவரி, 2016

எரிவதும் உருகுவதும் என் இதயம்தான்...

என் உயிர் என்னில்
உறைந்தே போனது...
இதயத்தில் நெருப்பை
மூட்டி எரிய விட்டாள்
அவள் காதல் தீயை...
எரிவதும் , உருகுவதும்
என் இதயம்தான்...
அவளுக்கு இதயத்தின்
வலி எங்கே புரியும்...!
எரிந்து சிதைவது நான்தானே...
புரிந்தால் என்னை
பிரிந்திருக்க மாட்டாளே...!

-Ajai Sunilkar Joseph

செவ்வாய், 19 ஜனவரி, 2016

செல்லத் திமிரடி உனக்கு....

ஒரு முத்தம் கேட்டால்
ஆயிரம் தடவை யோசித்து
பார்த்து ஒன்றுமே அறியாத
சின்ன குழந்தை போல்
இருக்கும் உன் செல்லத்
திமிருக்கு ஈடு இணை ஏதடி...?
கற்பனையில் மட்டுமே
முத்தங்கள் தருகிறாய்...
நிஜத்தில் உன்னை வெட்கம்
தின்று விடும் என்றுதானே...?
ஆனால் கற்பனையில் கூட
அழகாய் வெட்கப் படுகிறாய்...

-Ajai Sunilkar Joseph

புதன், 13 ஜனவரி, 2016

நட்பே மறந்து போனதாலோ...?

நட்பே நீதான் எனக்கு
உணர்வுகளாய் இருந்தாய்...
நீ என்னை பிரிந்ததால்
உயிர் இருந்தும் நடமாடும்
சவமாய் நானிங்கு தனியே
அலைந்து திரிகிறேன்...
எனக்குள் உணர்வுகள் யாவும்
மரத்துப் போனதே நட்பே
நீ என்னை மறந்து போனதாலோ...?

-Ajai Sunilkar Joseph

திங்கள், 11 ஜனவரி, 2016

வலிகளை தந்தவள் எங்கே...?

விழி வழியே நுழைந்தாள்...
இதய வாசலை திறந்தாள்...
கொஞ்ச நாட்கள் வாழ்ந்தாள்...
உரிமையோடு பழகி விட்டு
மரண வலிகளையும் தந்து விட்டு...
உணர்வுகளை எடுத்து சென்றாள்...
அவள் தந்த வலிகள் உள்ளே
வலிகளை தந்தவள் எங்கே...?
உணர்வுகள் இல்லாமல்
எனக்கு உயிர் எதற்கு...?
உயிரை மட்டும் எதற்காக
விட்டு வைத்திருக்கிறாளோ...?

-Ajai Sunilkar Joseph

சனி, 9 ஜனவரி, 2016

என்னில் உயிராகிய உனை மறப்பேனோ...?

நீ விலகி போகிறாய்
என்றால் விலகி விடு...
விலகி செல்லும் தூரம்
அவ்வளவும் என் அன்பும்
காதலும் அதிகரித்துக்
கொண்டே இருக்கும்
என்பதை மறந்து விடாதே...
உன்னில் உயிராகிய
எனை நீ மறந்தாலும்...
என்னில் உயிராகிய
உனை மறப்பேனோ...?

-Ajai sunilkar Joseph

வெள்ளி, 8 ஜனவரி, 2016

என் சுவாசத்தில் சேர்த்து விடு காற்றே

மனதில் காதல் ஆசைகளை
அடக்கி வைத்துக் கொண்டு
சொல்ல மறுக்கிறாள்...
அவள் என் பெயரை தன்
உதடுகளால் உச்சரிக்கும்போது
அவளுக்கும் தெரியாமல்
அவள் மனம் சொல்கிறது...
என்னிடம் அவள் காதலை...
அவள் இப்போது வாங்கும்
மூச்சை என் சுவாசத்தில்
சேர்த்து விடு காற்றே...
எத்தனை ஜென்மங்கள்
ஆயினும் அவளை சேர்வேன்...

-Ajai sunilkar Joseph

நட்பு என்பது உறவல்ல

எத்தனை உறவுகள்
நம்மை விட்டு பிரிந்தாலும்...
வலிக்காத இதயம் ஏன்
வலிக்கிறது ஒரு நட்பின்
பிரிவின்போது...?
ஏனென்றால் நட்பு
என்பது உறவல்ல...
இரத்தத்தில் ஊற்றெடுத்து
உயிரோடு உறவாடும்
உண்மையான உணர்வுகள்...

-Ajai sunilkar Joseph

வியாழன், 7 ஜனவரி, 2016

தூரமாக இருக்கும் நீ தாரமாவாயா...?

உன் நினைவுகள் என்னை
தெடர்ந்து கொண்டே இருக்கின்றது...
பாவம் அந்த நினைவுகள்...
அதற்கு தெரியவில்லை
நீ என் அருகில் இருந்தும்
தூரமாக இருக்கிறாய் என்று...
எனக்கு தூரமாக இருக்கும் நீ...
எனக்கு தாரமாக வருவாயா...?
வந்தால் நிம்மதி இல்லையேல்
உன் நினைவுகளுக்கு சமாதி...
என்னில் என் இதயத்தில்...

-Ajai sunilkar Joseph

புதன், 6 ஜனவரி, 2016

என் வீழ்ச்சியும் எழுச்சியும்

விழுவதும் , எழுவதும்
எனக்கு புதிதல்ல...
விழுந்தாலும் எழுவேன்...
உதயமாகும் சூரியனை போல...
நான் வீழ்ந்து போனால்
என்னை தூக்கி விட
யாரும் வேண்டாம்...
என்னில் ஒருவன் இருக்கிறான் ...
அவன் பெயர் தன்னம்பிக்கை...

-Ajai sunilkar Joseph

செவ்வாய், 5 ஜனவரி, 2016

கண்களை விட்டு செல்கிறேன் கல்லறைக்கு

இந்த ஜென்மத்தில் உன்னை
எப்படியாவது பார்ப்பேன்...
உன்னைப் பார்க்கவே
என் கண்களை விட்டுச்
செல்கிறேன் என் கல்லறைக்கு...
கல்லைறை சென்றாலும்
தூங்கி விடுவேன் என்று
நினைத்து விடாதே...
உன்னையே சுற்றி வருவேன்
என்பதையும் மறந்து விடாதே...

-Ajai sunilkar Joseph