புதன், 25 ஜனவரி, 2017

உண்மை மறந்தேனடி...

உண்மை மறந்தேனடி...


வலையுலக சொந்தங்களுக்கு 
பிரியமான வணக்கங்கள்...

எனது நெடுநாள் "ஆசை"
இசையுடன் கவிதை வாசிக்க
வேண்டும் என்று,
ஆனால் அது இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது...
உங்கள் முன்னால்...
தவறுகள் இருந்தால் தாராளமாக
கருத்துரையுங்கள்...
ஊக்கப்படுத்த உங்கள் போல்

சொந்தங்கள் இங்கில்லை...


ண்மை மறந்தேனடி
உன்னைத் தேடி...
உன் ஊசிப் பார்வை
உரசிப் போனதால் என்னை
உன்னில் தொலைத்தேனடி...
உயிரின் உயிராக
உன்னோடு உறவாட...
உயிரை உனக்கே 
உயிலெழுதி வைத்தேனடி...
உன்னை நினைத்தே 
உறங்க மறுக்கிறதென் 
உண்மைக் காதலடி...
உன்னவனாய் நான் மாற
உரிமையை எனக்கே கொடு
உரிமையானவளே...!

By...Ajai Sunilkar Joseph


இதோ இசையுடன் கவிதை


காணொளி




கரையோரம் சிதறிய கவிதைகள் 

12 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது வரிகள். ஆனால் ஆடியோ எரர் வருகிறதே

    பதிலளிநீக்கு
  2. நன்று... புதிய முயற்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!