திங்கள், 27 மார்ச், 2017

உன் மடியே போதுமடி...

உன் மடியே போதுமடி...


ன்னோடான பொழுதெல்லாம் 
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...

By...Ajai Sunilkar Joseph



காணொளி






8 கருத்துகள்:

  1. காணொளியும் கவிதையும் மிக அழகு

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!