திங்கள், 11 செப்டம்பர், 2017

வித்தகத்தி உன் நினைவால்...

வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி...


ன்னைத் தனிமையில் 
வதைக்கும் உன் நினைவை...
என் கனவாய் நான் ரசித்து,
நித்தம் அதை நினைத்து, 
பித்தம் எனைப் பிடித்து...
வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி,
என் கண்ணழுத கண்ணீரை,
உன் காலடியில் நான் தெளித்து,
விண்ணோடு நான் சேர
என்னை மண்ணோடு புதைத்தேனோ...!
உயிரென்ற ஒருசொல்
உனையென்றும் சுற்றி வர
இங்கேயே விட்டுச் செல்கிறேன்...
மீண்டும் ஒரு ஜனனம் என்றால்
என் மரணம்வரை நீ வேண்டும்...
மாறாத மனதோடும்,
மறவாத நினைவோடும்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி

6 கருத்துகள்:

  1. சோக காவியம்கூட அருமையாகத்தான் இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. சோகத்திலிருந்து எப்போது மீளப்போகின்றீர்கள் வரிகள் நன்று

    பதிலளிநீக்கு
  3. அருமை...

    எழுத்துருவை இன்னும் கொஞ்சம் பெருசாக்கலாமே சகோ

    பதிலளிநீக்கு
  4. அருமை.... எழுத்து இன்னும் கொஞ்சம் பெரியதாக இருத்தல் நல்லது... செய்யலாமே.

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!