திங்கள், 20 பிப்ரவரி, 2017

இதயம் செய்யும் துரோகம்...

இதயம் செய்யும் துரோகம்...


தயமே...
                 நீ எதற்காக துடிக்கிறாய்...?
எனக்காகவா...? அவளுக்காகவா...?
எனக்குள் இருந்து கொண்டு
அவளை நினைக்கிறாயே...!
இது துரோகம் தானே...!
ஹ்ம்ம்ம்...
                 அவளை விடவா நீ
துரோகம் செய்தாய்...!
என் இதயமே அவள்தானே...
அவளே அதைச் செய்யும்போது
நீ மட்டும் செய்யாமல்
இருப்பாயா என்ன....?


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மௌன தண்டனைகள் வேண்டாம்...

மௌன தண்டனைகள் வேண்டாம்...


னது கண்களால்
                     என்னை கைது செய்து,
என் இதயத்திலே நினைவுகள்
                     எனும் சிறைச்சாலை கட்டி,
என்னை என்னுள்ளே
                     அடைத்துப் போனவளே...
தயவாய் என்னை 
                     விடுதலை செய்யாதே...
என்னுள்ளே கைதியான நான்
                     உன்னை தாலிக்கயிற்றில் ஏற்றி,
உன்னிடமே ஆயுள் கைதியாக
                     ஆசைப்படுகிறேன்...
உன் மௌன தண்டனைகள் வேண்டாம்...
                     வார்த்தைகளால் கொஞ்சும்
தண்டனைகள் போதும்...
                     வாவா பெண்ணே
கொஞ்சும் தண்டனைகள்
                     கொஞ்சமாகத் தந்து விடு...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 11 பிப்ரவரி, 2017

அவள் வரவை எதிர்பார்த்து....

அவள் வரவை எதிர்பார்த்து....


ண்முன் தோன்றி
                      கற்றோடு கரைந்து,
மீண்டும் தோன்றி
                      கனவாய் கலைந்து,
நிஜம் கண்டு 
                      நினைவோடு நிலைத்தவளே,
நின் மூவேழு வயதும்
                      எங்கேதான் இருந்தாயோ...!
நான் பார்வையற்றிருந்தேன்,
                      பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...!
                      திக்கு திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன்...
                      தேவதையே உன்
வரவை எதிர்பார்த்து...!


By...Ajai Sunilkar Joseph



காணொளி 




கரையோரம் சிதறிய கவிதைகள் 

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தனிமை காதலி...

தனிமை காதலி...

நீ விரும்பி வந்துதான்
விலகிச் சென்றாய்,
வலியொன்றுமில்லை
ஆனால் வலிக்கிறது,
கவலைப்படாதே...
                           உன்னால் 
என் இதயம் அடைந்த 
வலிகளை யாரிடமும் 
சொல்லி விடமாட்டேன்,
எனக்கு கிடைத்த என்
தனிமையெனும் காதலியிடம்
பிதற்றிக்கொண்டு என்னை 
நானே தேற்றிக் கொள்கிறேன்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 


வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...


ன் விழியோரம்
                          வழிந்த கண்ணீரால்,
உன் இதயத்தின்
                          ஸ்பரிசம் உணர்ந்தேனடி...
என்னவளே உன்னைக் காணாமல்,
                          என்னிதயம் உன்னைச் சேராமல்,
மண்ணோடு மண்ணாய் போவேனோ...!
                          என்ற ஏக்கம் என்னைக் கொல்கிறது,
கண்ணிருந்தால் கொஞ்சம் 
                          வாசித்துப் போடி...
உன்னிடம் நான் யாசிக்கும் என் காதலை...



By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்