திங்கள், 27 மார்ச், 2017

உன் மடியே போதுமடி...

உன் மடியே போதுமடி...


ன்னோடான பொழுதெல்லாம் 
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...

By...Ajai Sunilkar Joseph



காணொளி






சனி, 25 மார்ச், 2017

குற்றமெனில் தண்டித்துவிடு...

குற்றமெனில் தண்டித்துவிடு...


ன்னை உதறி விட்டுப் 
போன உன்னையே
பற்றிப் பிடித்திருப்பது
குற்றமெனில் தாராளமாக
என்னை தண்டித்துவிடு,
மௌனங்கள் தவிர்த்து...


By...Ajai Sunilkar Joseph



                          கரையோரம் சிதறிய கவிதைகள்

திங்கள், 20 மார்ச், 2017

தவத்தின் பலன் பொய்யூர்...

தவத்தின் பலன் பொய்யூர்...


த்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...


By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 

வெள்ளி, 10 மார்ச், 2017

பார்வைத் தந்த பாவை...

பார்வைத் தந்த பாவை...

பார்வை இழந்த
விழிகளுக்கு 
பார்வைத் தந்த
பாவை எங்கே...!
அவள் தந்த
பாசத்தின் ஓர் 
துளி மட்டும்
கதறுது இங்கே...
நெஞ்சில் அவளை
நினைத்துப் பார்த்தால்
நிலையாத கனவாய்
கண் வழி உதிர்வாள்...

By...Ajai Sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 8 மார்ச், 2017

என்னவளே என் உயிரில் கலந்தவளே...

என்னவளே என் உயிரில் கலந்தவளே...


ன்னவளே என்
நினைவில் கலந்தவளே...
காதலிக்கும் போது 
நீ எனக்கு ஆறுதலாய் 
சொன்ன வார்த்தைகள்
நீ என்னை விட்டு
பிரிந்து போன பின்னே
அதிகமாக கண்ணீர்
துளிகளைத் தருவதுதான் ஏனடி...!
பதில் தெரியாத நானோ
பேதையாய் உன் நினைவுப்
போதையால் தடுமாறிப் 
போகின்றேடி...


By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 

திங்கள், 6 மார்ச், 2017

துணையான உன் நினைவுகள்....

துணையான உன் நினைவுகள்....


ன் தனிமையில் துணை 
நின்ற உன் நினைவுகளை
அதிகமாக காதலிக்கின்றேன்...
ஏனென்றால்...
                         நீ  என்னுடன் இருந்த
நாட்களை விட உன் நினைவுகள் 
இருந்த நாட்களே அதிகம்...
என் கண்களின் கண்ணீராய்,
என் இதயத்தின் செந்நீராய்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 4 மார்ச், 2017

என் தேடல் நீ....

என் தேடல் நீ....

தேடி வந்த நீயோ
                       உதறி விடுகிறாய்,
தேடித் திரிகிறேன்
                       கிடைக்க மறுக்கிறாய்...
தொலைதூரம் நின்று
                       என்னுள்ளே வாழ்கிறாய்...
உன்னிடம் மட்டுமே தேடுகிறேன் 
                       என்னிடம் கிடைத்தும் 
பறிக்கப்பட்ட என் காதலை...
                       நீ மட்டுமே என் தேடல்,
நீ கிடைக்க மறுத்தாலும்...
                       நான் தொலையும் வரை
என் தேடல் தொடரும்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்