ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பார்வையால் போர்த் தொடுக்கிறாள்...




ன் இதயத்தை
கொத்தாய் பிய்த்தெடுக்க
பார்வையால் போர்த்
தொடுத்தவளே...!

என் இதயத்தின்

மென்மையை அறியாத
பெண்மை யா உனது...!

என் இதய பூமியின்

சாமியே நீதானடி...
பெண்ணே...!

உன்னையே ஆராதிக்கும்

பக்தனாய் நான் இருக்க,
ஏனடி என்னை
பித்தனாய் மாற்றினாய்...?

என் மேல் சினம்

கொண்ட சினேகிதியே
உன்னை மணம் கொண்டால்
தீருமோ இந்த தண்டனை...?

உன் தணியா கோபத்தை

உன் அன்புக்குப் பணிந்த
என்மேல் ஊற்றாதே,

சிறு சிறு கவிதைகளாய்

என்னில் ஊற்றெடுக்கும்
தூயவளே

உன் பார்வை தீயை 

ஊற்றி என் காதலை
கொஞ்சம் எரிய விடு...!



Video




சனி, 17 நவம்பர், 2018

கூர்வாள் விழிகள்

கூர்வாள் விழிகள்


கூர்வாள் விழிகளா உனது
பார்வையால் என்னைக்
கூறு போடுகிறாய்,

உன்னைத் தேடித் தேடித் நானும்
தொலைகிறேன் பெண்ணே
எங்கே இருக்கிறாய்
பதில் சொல் கண்ணே...

உன் ஞாபகம் என்னை
வதைக்கையில் என்
மடிமீது உன்னை வீணையாய்
மீட்ட நினைக்கிறேன்,
ஏன்தான் என்னை சோளக்
கதிராட்டம் வாட்டுகிறாயோ...!

உன்னைக் காதல் மானாய்
ரசிக்கிறேன் நானே
ஏன்தான் என்னை
வெறுக்கிறாய் நீயே...!

உன் விழிகள் விதைத்த
காதலைச் சொல்கிறேன்
கொஞ்சம் புரிந்து கொள்ளடி
என்னை வதைக்காமல்...!


Ajai Sunilkar Joseph


Video




வியாழன், 15 நவம்பர், 2018

அகம் தேடிய அகதி

அகம் தேடிய அகதி



ன் கண்ணிமைகளின் 
சிறகடிப்பில் 
என்னைச் சிறைபிடித்தாய்,

இதழ்களை பிரித்து புன்னகைத்தாய் 
ஓரிரு நொடிகள் உறைந்தே போனேன்,

தாய் காணா சேய் போல்
உன் அகம் தேடி 
உன் விழிகளில் 
அகதியாய் சுற்றித்திரிகிறேன்,

உன் இதயத்தில்
என்னைக் குடியேற்றிக்
காதல் குடியுரிமைக்
கொடுத்து விடு,

இல்லையேல் உன் மனதில் 
என்னைக் கைது செய்து

ஆயுள்கைதியாய் அடைத்து விடு...


Video


புதன், 14 நவம்பர், 2018

காதலுக்குச் சொந்தக்காரி

காதலுக்குச் சொந்தக்காரி




நினைவுகளை அள்ளி
என்னுள் விதைந்தவள்

என் இதயத்தையே
அறுவடையாய் கொய்து
போய் விட்டாள்,

எங்கேதான் போனாளோ
தெரியவில்லை
அவள் சென்ற வழித்தடமும்
புரியவில்லை,

தென்றல் செல்லும்
திசையெல்லாம்
தேடிப்பார்க்கிறேன்,

பூவையவள் போன
திசை தென்றலும்
அறியவில்லையே,

என்னுள் காதலைக்
காவியமாய் தந்தவள்
நெஞ்சுக்குள்
ஓவியமாய் நிற்கின்றாள்,

பவித்திரமான
காதலுக்குச்
சொந்தக்காரி

என்னைக் காத்திருக்கச்
சொல்லிவிட்டு
பவ்யமாய் கடந்துவிட்டாள்,

என் கண்களைத் தாண்டி
கனவுகளாய் என்னைத்
தழுவிச்செல்கிறாள்,

பிறகு ஏன்தான்
என்னைக் கை கழுவிச்
சென்றாளோ
தெரியவில்லை...

Video




சனி, 3 நவம்பர், 2018

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...


நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன் கைகள் கோர்த்து,
உன் தோளோடு உரசி,
சற்றும் இடைவெளி விடாமல்,
கை விரல்களின் இறுக்கத்தில்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னிரு விழிகளிடம்
என் விழிகளால் பேசி,
உந்தன் காதுகளோரம்
கவிதைகளால் பேசி

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னைச் சிறைபிடித்த
பாவையுந்தன் நினைவுகளை
என் பாதையோரம் 
பரப்பி வைத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

பெண்ணே உன்னால் 
என்னில் பல கனவுகளைக்
கண்டெடுத்து என்னையே
நான் மீண்டெடுத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னை நித்தம் 
சித்திரவதை செய்யும்
உந்தன் நினைவுகளைத்
தேடித் தேடி நானும்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னைக் கண்டுபிடித்தும்
தொலைதூரம் மறையும் கானலாய்
நீ மறைந்து விடுவாயோ
என்ற பயத்தாலே நான் தனியாக

நெடுந்தூரம் நடந்து விடுகிறேன்...

Video





வியாழன், 27 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

உன் நினைவுகள்



ள்ளிரவில் விழித்தெழுந்தேன்,

காரணம்...

                 உன் நினைவுகள்

என்னை ரணங்களாய்

கொல்வது போல உணர்வுகள்...

என் தூக்கம் தொலைத்து

புரண்டு புரண்டு படுத்தும்

என் தூக்கத்தை காணேன்,

தேடிப் பார்க்கிறேன் உன்னை,

கண்ணில் சிக்காமல் நழுவி

விடுகிறாய் ஒவ்வொரு கணங்களும்,

மண்ணில் ஏன் பிறந்தேன்

என்றுத் தோன்றுகையில்,

எனக்குள் வேரூன்றுகிறாய்,

நினைவின் விருட்சமாய்

வளர்ந்தும் விட்டாய் பெண்ணே,

உன்னை நிஜத்தில் காணவே

இமை வாசலைத் திறந்து

காத்திருக்கிறேன்,வந்து

இதயத்தில் நுழைந்து விட்டு

இமைகளை மெதுவாக மூடி விடு.

Ajai Sunilkar Joseph 









ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

என்னவென்று  நானெழுத  உனக்காக  வரிகளை...?

என்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...?



ன்னவென்று
நானெழுத
உனக்காக
வரிகளை...?

ஏதோ எழுத நினைக்கிறேன்
இருந்தும் மறந்து விடுகிறேன்,
ஏன்தான் என்று புரியவில்லை...!

இதயம் எழுதத்தூண்டுகிறது,
கைகள் எழுத மறுக்கிறது,
கைகள் எழுத நினைக்கிறது
ஆனால் இதயமோ உன்னை
சிந்திக்க மறுக்கிறது,

ஒன்று நினைக்க,
ஒன்று மறுக்க
உனக்கும் எனக்குமென
இடைவெளி மட்டும் நீண்டு
கொண்டே இருக்கிறது...

காரணம்தான்
என்னவென்று
விளங்கவில்லை,

என்னை நானே விசாரணைக்
கைதியாக்கி விசாரித்துப்பார்க்கிறேன்,
இவ்வழக்கின் தீர்ப்பொன்றும்
எனக்குக் கிடைக்கவில்லை,

இப்படி இருந்தால்
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

கனவுகளுக்குள்ளே
தத்தளிக்கிறேன்
பெண்ணே...
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

என்னோடு முடக்கிவைத்த
உன் ஞாபகங்களை
எடுத்துச்சென்ற பிறகு
நான் எரிக்கட்டையாய்
போன விறகு,

இதையறிந்த பின்னும்
எப்படிக் கேட்கிறாய்
உனக்கான வரிகளை...?

நெஞ்சில் கொள்ளி வைத்து விட்டு
வஞ்சி உன்னால் எஞ்சிய வலிகளை
மட்டும் கொஞ்சி விளையாடுகிறது
என்னுள் இருக்கும் இதயம்,

வலிகளை எனக்கு வரமாக்கி
விட்டு வார்த்தைகளை
சாபமாக்கிப் போன பிறகு
என்னவென்று நானெழுத
உனக்கான வரிகளை...?

Ajai Sunilkar Joseph 




வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பைத்தியக்காரன்...

பைத்தியக்காரன்...


காற்றில் அசையும்போது

திசைகள் தேடும் பறவையாய்

உன்னைத் தேடுகிறேன்,

திரும்பிய திசையெல்லாம்

விரும்பிய உன் பிம்பம்

மட்டுமே காண்கிறேன்,

உன்னையே பிரதிபலிக்கச்

செய்யும் உன் ஞாபகக்

கண்ணாடிகளை அதிகம்

பார்த்து பாதிக்கப்பட்டுவிட்டேன்...

உன் உறவிழந்த பின்னால்

பெண்ணே...!

சிறகிழந்த பறவையானேன்,

நான் அழுதிடும் வலிகளை

எழுதிடும் வரிகளால் உனக்குத்

தொடுத்துப்போகிறேன்

கவிதை மாலையாக,

புரிவதும் பிரிவதும் உன்

உரிமை என்ற பின் உனக்கு

என் காதலை புரியவைக்க

முயற்சிக்கும் நான் உண்மையிலேயே

பைத்தியக்காரன்தான்...

Ajai Sunilkar Joseph


காணெளி



By...
-A



புதன், 29 ஆகஸ்ட், 2018

இறைவனுக்கு நன்றி...!

இறைவனுக்கு நன்றி...!



நாம ஒண்ணு நெனச்சா  கடவுளும் விதியும்  இன்னொண்ணு நெனைக்கிறாங்க...!
என்ன வாழ்கைடானு நினைக்கிறதா இல்லை இதான் வாழ்க்கைனு நெனைக்கிறதா
ஒண்ணுமே வெளங்கல,சரி கஷ்டம் வரும்போது கூடவே  புலம்பலும் மனிதனுக்கு 
வருவது இயல்புதானே?அதான் இந்த புலம்பல்,இரண்டடி நடந்தால் நாலடி பின்னுக்கு 
இழுக்குதுங்க இந்த விதி,வரும் கஷ்டத்த வராதேனு சொன்னாலும் அது கேட்கிற மாதிரி தெரியல, அதான் கொஞ்சம் இஷ்டப்பட்டு வரவேற்கிறேன்...!


பெரிய கஷ்டம் ஒண்ணும் இல்லைங்க, 16/8/2018 அன்று என்  சகோதரனுக்கு ஒரு விபத்து 
நடந்ததுங்க! அதான் இந்த புலம்பலே,பாதத்தை தூக்க உதவும் நரம்புகள் அனைத்தும் 
விபத்தில் துண்டிக்கப்பட்டது , பிறகு மருத்துவ மனையில் அனுமதித்து இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து 24/8/2018 அன்று வீட்டுக்கும் வர சொல்லிட்டாங்க. என்னதான் மனச
தேத்திட்டு ஆறுதல் சொன்னாலும் வலி வலிதானே...!

விபத்து அன்றிலிருந்து சரியாக வேலை செய்ய முடியல,பதிவிட முடியல, மருத்துவமனையில் 
சகோதரன் கூட மூன்று தினங்களே தங்கியிருந்தேன்.சரி அவனை என் அப்பாதான் கூட 
இருந்து கவனித்துக்கொண்டார்,பாவம் அவர் விதிய பாருங்களேன் அவரை நாங்கள் 
பார்த்துக் கொள்ளும் வயதில் எங்களை பார்த்துக் கொள்கிறார்.கடவுள் போல கவனிக்கிறார்,

இந்நேரம் இறைவனுக்கு நன்றி சொல்லியே ஆகணும் இப்படியொரு தந்தையை தந்தமைக்கு.



ஏதோ ஓரு பயணம்,

அதில் எத்தனையோ 

ஏற்ற இறக்கங்கள்,

கற்களும்,முட்களும் மிதித்து 

துவண்டு போகாத ஓர்

உள்ளத்தின் கால்கள்,

வேர்த்து வெலவெலத்துப் போன

தேகத்தின் மூச்சிரைச்சல்,

முடங்கிப் போய்டுவேனோ

என்ற பயம் உள்ளே,

பயத்தை சாகடிக்க தைரியம் வெளியே,

எழ எழ வீழ்ச்சி,

காலத்தின் சூழ்ச்சி,

தேவன் கைகளின் பொம்மையாய்,

குயவன் கை மண்பாண்டமாய்

வனையப் படுகிறேன்,

சிறகினை கொடுத்துவிட்டு

சிறகை பறித்தால் வலிக்குமா...!

ஓரிறகை பறித்தாலும் 

பறக்க முயலும் பறவையாய்

முயல்கிறேன் நான்,

இதயத்தின் வலுக்கூட்டி

இமயத்தின் வெற்றியைத் தொட,

சோதனை பலவென வந்தாலும் 

சோர்வே இல்லாத இதயம்,

தந்த இறைவனுக்கு நன்றி...!


Ajai Sunilkar Joseph




புதன், 15 ஆகஸ்ட், 2018

உனக்கேது சுதந்திரம்?

உனக்கேது சுதந்திரம்?

முந்தைய கவிதை
👇👇👇👇👇
இனியவள்

டையாளப் படத்தில் 

 அடைத்தான் உன்னை,

 அதில் உன் சகலமும்

 அடைக்க வைப்பான்,

 உனக்கேது சுதந்திரம் ...?


Ajai Sunilkar Joseph 



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இனியவள்

இனியவள்

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇


வள் 
இதழோடு 
இதழ்
இணையும் 
இக்கணம்,
இனியவள்
இவளின் 
இதயத்தில்
இடியோசை 
இசைக்கிறது,
இசையின் 
இறுக்கத்தில்
இனிதே 
இவளிடையில்
இதழ்கள் 
இணைகின்றேன்...


Ajai Sunilkar Joseph 





ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தொடர்கிறேன்...


தொடர்கிறேன்...

முந்தைய கவிதை
👇👇👇👇


ன்னை வர்ணித்து எனக்குக் 

கவிதைகள் எழுதத் தெரியவில்லை,

ஆனால் உன்னைக் கவிதைகளாய் நேசிக்கிறேன்,

எந்தன் கவிதைகளே நீ என்கிறேன்,

உன்னையே தினம் சுவாசம் கொள்கிறேன்,

நீ சுவாசிக்கும் காற்றில் 

என் கவிதைகளை அனுப்பி

உன்னைச் சேர முயற்சிக்கிறேன் ...

ஒன்றாவது உன்னிடம் வந்து

சேர்ந்ததா என்றுத் தெரியவில்லை,

உந்தன் அழைப்பொலியும் என்னிடம் சேரவில்லை,

ஒரு தவறிய அழைப்பும் என் கைப்பேசியில் 

கிடைக்கவில்லை,

அதனால்தான் முடிவு செய்து விட்டேன்,

என் மூச்சுள்ளவரை என் காதலாலும்,

என் கவிதையாலும் உன்னைத் 

தொடர வேண்டுமென்று...

Ajai Sunilkar Joseph


காணொளி



வியாழன், 9 ஆகஸ்ட், 2018

அவள் அறிமுகம் 3

அவள் அறிமுகம் 3


அவளது முந்தைய
அறிமுகங்கள்
👇👇👇👇👇👇👇👇
அவள் அறிமுகம் 1,
அவள் அறிமுகம் 2


ன் உலகமே இருண்டு போனதே

                    தெய்வத் திருமகள் அவளது

திருமுகம் காணாத ஓர் நாளில்,

                    நாளை வருவாளா வெளிச்சப்

புன்னகையை பளிச்சென்று வீச,

                    காத்திருக்கிறேன் கண்மணிக்காக

கானலாய் மறைந்து போகின்றாள்...!

                    அவள் இதயக் கள்வன் நானிருக்க

யாரோ ஒருவருக்காய் அவள்

                    பூமுகத்தை மறைக்கின்றாள்...!

அவள் எங்கு சென்றாலும்

                    தேடி போவேன் என்றாலும்...!

என்னைத் தேவையே இல்லையென்று

                    வாட்டி வதைக்கின்றாள்...!

பூங்காற்றாய் அவளைத்

                    தேடிப் போகிறேன்...

வார்த்தைத் தீயள்ளி என்மேல் வீசுகிறாள்...!

                    காதல் ரோஜாவை கையில் ஏந்தி

ஏந்திழை அவளின் வருகைக்காக

                    ஏகாந்தமாய் காத்திருக்கிறேன்...

ஆயிரமாயிம் கனவுகளுடனும்,

                    அதிசயமான அவள் நினைவுகளுடனும்...

Ajai Sunilkar Joseph 











சனி, 4 ஆகஸ்ட், 2018

தாயகம் திரும்பிய பறவை...

தாயகம் திரும்பிய பறவை...


அன்பான இணைய சொந்தங்களுக்கு
அஜய் ன் அன்பான வணக்கங்கள்...

நான் எழுதும் கவிதைகளுக்கு பின்னணிப் படங்களை  
கவிதையை எழுதிய பின்னர் நானே படங்களை எடிட் 
செய்து அதன் மேலேதான் கவிதைகளை டைப் செய்வது வழக்கம்.

ஆனால் இன்று போட்டோஷாப் இல் மனமும் , கைகளும் 
போன போக்கில் ஒரு படத்தை எடிட் செய்தேன்,ஆனால் 
அதற்கான வரிகளை எவ்வளவோ சிந்தித்தும் புலப்படவில்லை,
வெறும் நால்சுவர் அறையில் தரையை வனாந்தரமாகவும்,
அதில் நானே நின்று சுவரில் மாட்டப்பட்ட ஒரு வயல்வெளிப்
படத்தையும், அதன் மேலே ஏசி யையும் பார்க்கிறேன்...
வெறும் கற்பனையாகவே இந்தப்படத்தில் வாழ்ந்துள்ளேன்,
இந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் இருந்தால் எப்படி வலித்திருக்கும்!
எனக்குத் தோன்றிய வரிகளை கீழே எழுதியுள்ளேன்,தவறுகள்
இருந்தால் தயவாய் மன்னிக்கவும் நண்பர்களே...!
(ஆனால் அந்தப்படத்தைப் பார்த்தால் ஏதோ மனம் வருந்துகிறது)
(படத்தை கீழே கொடுத்துள்ளேன்)

உங்களுக்கு ஏதாவது புலப்பட்டால் பின்னூட்டங்களில் 
தாருங்கள் அன்பர்களே...!



"இறக்கை அடித்தே அழகிய நாளை
நினைத்து வந்தேன்,

வேர்வை வழியே உதிரம் சொட்டி,
கற்றை பணத்தைக் கையில் எடுத்து,

எத்தனை காலம் ஏங்கி நின்றேன்
இல்லம் ஒன்றை வடிவமைக்க,

உற்றார் ஒன்றாய்,ஊரார் ஒன்றாய்,
வார்த்தைகள் அள்ளி வாழ்க்கையில் வீசி,

கட்டிய வீடு அழகாய்த் தெரிய,
ஆனந்தம் கொண்டேன் ஆழ்மனதில்,

வீடும் எனதாய்,வாழ்க்கையும் எனதாய்,
மனையில் வாழ மனைவியை தேடி,

அலைந்த தூரம் கொஞ்சமில்லை,
அழகாய் ஒருத்தி,அன்பாய் ஒருத்தி,

இரண்டும் ஒன்றாய் கிடைத்திட தவித்தேன்,
வருங்கால மனைவியாய் அவள் வந்தாள்,

நினைக்கும் நேரம் காணொளிப் பேசி,
கனிந்தே வந்தன வார்த்தைகள் கோடி,

மங்கை கழுத்தில் மாலைத் தொடுக்கும்
நாளும் நெருங்க , மணந்தும் கொண்டேன்,

நினைத்த நேரம்,நினைத்த வாழ்க்கை,
கொடுத்து வைத்த வாழ்க்கையாம் எனக்கு...!

ஹ்ஹ்ம்ம்....

வாழ்த்திய நெஞ்சங்கள் பலருக்கும் நன்றிகள்
சொல்லி வழியனுப்பி விட்டேனேத் தவிர,

அலாதி அன்பை இழந்த துக்கம்
மட்டும் என்னை விடாமல் துரத்த,

அயலகம் சென்றேன் உழைப்பதற்காக,
தாயகம் வந்தேன் பிழைப்பதற்காய்,

வாயடைத்துப் போய்,வருந்தி நின்றேன்,
என் பசுமை நிலத்தைப் படமாய் பார்த்து...!

காற்றையும் எனது கற்றைப்பணத்தில்
அறையில் அடைத்து விட்டேன்,

என் தந்தையின் விவசாய நிலம் எங்கே...?
அது படமாகத் தொங்குது இங்கே...!

தாயகம் திரும்பிய பறவைக்கு
அமர்ந்திளைப்பாற ஓர் பூவனம் இல்லை,

சோலையெல்லாம் சாலையாய்,
நான் வாழ்ந்த பூமியே பாலையாய,

காண்கிறேன் கண் முன்னே
உயிருடன் சாகிறேன் இங்கே...!"

Ajai Sunilkar Joseph 



By...

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அம்மா

அம்மா

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇
உனக்கான கவிதைகள்

லகம் காணும் முன்னே

உன்னில் நானே

உதயமாகிப் போனேன்,

அம்மா நீதான் என்னைத்

தாங்கிக்கொண்டாய்,

எனக்கு மறு ஜென்மம்

என்று ஒன்றிருந்தால்

எனக்கே மகளாகி விடு...!

என் தவமாகி விட்டாய்

நீயே எனக்கு வரமாகிடு...!
Ajai Sunilkar Joseph 

By...



வியாழன், 2 ஆகஸ்ட், 2018

உனக்கான கவிதைகள்

உனக்கான கவிதைகள்


முந்தைய கவிதை
👇👇👇


ன் 

விழியசைவில்

துவக்கம் பெற்றது 

என் 

கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph


ன்னிதழ்களின் 

முணுமுணுப்பில்

உயிர் பெற்றது 

என் கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph 


னக்கான 

வரிகளை

சருகுகளாய் உதிர 

வைக்கிறாய் 

என் 

கவிதைகளில்...!
Ajai Sunilkar Joseph 


ன் 

பேனாவுக்கு

உயிர் 

கொடுத்து 

எழுத வைக்கிறாய்

உனக்கான 

கவிதைகளை...!
Ajai Sunilkar Joseph 


னைவதும்,

புனைவதும்,

நானே என்றாலும் 

உனக்ககாகவே 

என் கவிதைகள்...
Ajai Sunilkar Joseph


By...


திங்கள், 30 ஜூலை, 2018

என்னால் முறிந்த பேனா...

என்னால் முறிந்த பேனா...

ன் நிலமை கருதி

என் குருதி சிந்தி,

உன்னாலே உனக்காக

கவிதைகள் பல எழுதியும்,

உன்னால் நான் 

முறிந்தது ஏனோ...?

உன் காதலுக்குத்

தீர்ப்பு எழுதி விட்டாயோ...?



Ajai Sunilkar Joseph 



அவள் அறிமுகம் 2

அவள் அறிமுகம் 2


அவளது 
முந்தைய அறிமுகம்
👇👇👇👇👇



ழுந்திட நினைத்தேன் 

நெஞ்சோடு அணைத்தாள்,

நிமிர்ந்திட துடித்தேன்

இதழோடு இணைத்தாள்,


குறுகுறுப் பார்வையால்

குற்றாலச் சாரலை 

என்னுள் வீசிப்போகிறாள்,

நிலைமாறிப் போகிறேன்,


சித்திர விழியாளால்

சிற்பியாய் மாறினேன்,

சிற்பமாய் வர்ணித்தேன்

சிலையென ஆகிறேன்,


மதயானைக் கூட்டமாய்

எனை மோதிப்போகிறாள்,

பட்டென சாய்கிறேன்,

சிட்டென பறக்கிறேன்,


அலைபாய்ந்த கண்ணுக்குள்

சிலையாக நிற்கின்றாள்,

சீறும் அலையாக

நினைவாலே பாய்கிறாள்,


அரை நொடிப் பொழுதும்

பிரிய மறுக்கிறாள்,

கண நொடிப் பொழுதும் 

புரிய மறுக்கிறாள்...


Ajai Sunilkar Joseph 





சனி, 28 ஜூலை, 2018

துயில் கொள்ளப் போனாயோ...?

துயில் கொள்ளப் போனாயோ...?

முந்தைய கவிதை
👇👇👇👇👇

னக்காக
ஏங்கிநின்றேன்,
எங்கெங்கோ
தேடிப்பார்த்தேன்,

முகிலின் மடியில்
தேடிப்பார்த்தேன்,
தொடுவான எல்லைத்
தாண்டிப்பார்த்தேன்,

கிணற்றின் அடியில்
எட்டிப்பார்த்தேன்,
குளத்தில் கொஞ்சம்
மூழ்கிப்பார்த்தேன்,

நான் தேடாத
இடமுமில்லை,
தேடிப்பார்த்த
தடமுமில்லை,

கண்ணெட்டும்
தூரம் தேடுகிறேன்,
இருள் வான் மட்டும்
காண்கிறதே...!

தொலை தூரம்
நின்றே தேடுகிறேன்,
நீயும் தொலைந்தே
போனாய் என்றதினால்,

உன்னைக் காணா
ஏக்கமதில்
தூக்கமில்லை
கண்களிலே,

என் தூக்கமெல்லாம்
கலைத்துவிட்டு
துயில்கொள்ளப்
போனாயோ வெண்ணிலவே...!

Ajai Sunilkar Joseph 



By...Ajai Sunilkar Joseph 


வியாழன், 26 ஜூலை, 2018

தேடித்திரிய நாதியுண்டோ...?

தேடித்திரிய நாதியுண்டோ...?

முந்தைய கவிதை
👇👇👇


"ந்தக்கவிதையை எழுதி வைத்து நெடுநாட்கள்
ஆகிவிட்டது , அதை பதிவிட இன்றுதான் அதற்கு
விதி வழி விட்டது போல..!

இது "மழை" இல்லாமல் வறட்சியை சந்தித்த பூமியை
பார்த்து தன் தலையை சாய்த்து உயிர் மாய்த்த தென்னை
மரங்களைப் பார்த்து மனம் நொந்ததினால் எழுதி வைத்தேன்,

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னால் பெய்த "மழை"கடந்த
ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் பெய்திருந்தால்
இந்த வருத்தம் வந்திருக்குமா...?

இதற்கு காரணம் யார்...?

அதையே இந்தக்கவிதையில் எழுதியுள்ளேன்,
பிழைகள் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்🙏"



ச்சி வெயிலில்
காயும் தென்னை
மண்ணை மஞ்சமாக்கி
சாயுதே இங்கே...!

காணாமல் போன
மாரியும் எங்கே...!
தேடித் திரிய
நாதியும் உண்டோ...!

மாரி மிதக்கும்
கார்முகில் எங்கே...!
சுட்டெரிக்கும் சூரியனால்
தீய்ந்தே போனதோ...

வெட்டும் மரங்களின்
கொட்டும் சாபத்தால்,
தூரத்தின் சூரியன்
பக்கத்தில் ஆனதால்,

சோலை வனமெங்கும்
பாலைவனம் ஆனது
சினம் தணியா ஆதவனின்
சுட்டெரிக்கும் தீ கதிராலோ...!

மெய்ஞானம் மறந்து
விஞ்ஞானம் வளர்த்து
வீண் ஞானம் கொண்ட
மதிகெட்ட மாந்தர்களாலோ...!


இதற்கு நாமும் விதிவிலக்கல்ல,ஒரு மரம் இடையூறு என்றால் அதே வேருடன் வெட்டுவதில் நாமும் கில்லாடிகளே...
அதில் நானும் ஒருவன் என்பதால் வெட்கப்படுகிறேன்.

கீழ்காணும் புகைப்படம் கைப்பேசியில் க்ளிக்கியது , எங்கள் வீட்டுப்பக்கம் எத்தனையோ தென்னை மரங்கள்
மாண்டு போயின,இந்தப் புகைப்படத்தில் காண்பது
ஓரிடத்தில் மொத்தமாக மாண்ட தென்னைமரங்கள்,
சாதாரணமாக புகைப்படம் தெளிவாக வரும்,இது
Panorama Option இல் க்ளிக்கியதால் கொஞ்சம் தெளிவு கம்மியாகவே இருக்கும்.
Ajai Sunilkar Joseph







அவள் அறிமுகம் 1

அவள் அறிமுகம் 1

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇👇
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...


வளது ஊமை

 விழிகளின் மௌனத்தை

 மொழிப்பெயர்க்க முயன்றேன்,

 அவள் நெற்றியொரு

 வானென்று கண்டேன்,

 அதன் கீழொரு உயிர்

 கொண்ட வில்லொன்று

 விழிகளில் காதலை நாணேற்றி

 எந்தன் உயிர்நாடித் தேடிக்

 குறிபார்த்து அடித்திட விழுந்தேன்,

 நானும் அவளிடம் காதலில்...!


Ajai Sunilkar Joseph 


By...




செவ்வாய், 24 ஜூலை, 2018

எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...

எல்லாம் 
ஒரு 
எதிர்பார்ப்புதான்...

முன்தின பதிவு
👇👇👇👇👇

ன்
காதல்
கவிதைகளாகத்
தொடர்கிறது...

என் காதலி யாரென்று
கேட்டால்
காதலியே கவிதைகள்
தான் என்பேன்,

நான் காதல்
கொண்டது
அவளிடமா
என் கவிதைகளிடமா...?

அவளால்தான் கவிதைகள்
கண்டேன்,பின்னர்
அவளையே கவிதைகளாய்
கொண்டேன்,

அவள் விழிகளைப்
பார்த்தால் விண்ணைத்
தொடுமளவும் கவிதைகளை
அடுக்கி வைப்பேன்,

நேருக்கு நேர்
நின்று அவள் கூர்வாள்
விழிகளை நான் இன்னும்
பார்க்கவில்லை,

பார்த்திருந்தால்
சொல்லியிருப்பேன்
யார்தான்
அவளென்று...

அவளை ஒருமுறைப்
பார்த்தால் போதும்
ஏழேழு ஜென்மங்களும்
தொடர்வேன்
அவளுக்கான வரிகளை,

அவள் எங்கேயென்று
கேட்க வேண்டாம்
கேட்டால் எனக்குச்
சொல்லத் தெரியாது,

இதயத்திலே
இருக்கிறாளா என்றால்
இதயமாகவே
இருக்கிறாள் என்பேன்,

கண்களிலே
இருக்கிறாளா என்றால்
என் கண்களே
அவள் தான் என்பேன்...

என் விழிகளின்
விழித்திரையில்
அவளே வந்து
சுற்றித்திரிகிறாள்,

என் கனவு
தேசத்தை அவளே
ஆக்கிரமித்து காதலால்
ஆட்சி செய்கிறாள்,

எனக்கு என்னமோ
என்னவள் என் கவிதைகளிலே
உயிர்கொண்டு அதிலே
குளிர்காய்கிறாள்
என்றுத் தோன்றுகிறது,

எங்கே,
எப்படி
அவளை
கண்டுபிடிப்பேன்...?

பூவிடம் கேட்டால்
சொல்லிவிடுமா,
அவளையே
முகவரியாய் கொண்ட
பூங்காற்று சொல்லிடுமா...?

வேண்டாம்...வேண்டாம்...
இரண்டுமே
பூவையவளிடம்
பொறாமை கொள்ளும்

பருவகால வானவில்லிடம் கேட்டால்
கோடி வானவில்லும்
கூடிவந்து குடிகொண்ட
அவளின் புருவம்
பார்த்து நாணம் கொள்ளும்...!

எங்கே
தேடுவேன்
எந்தன்
இதயராணியை...?

காத்திருக்கலாமா
யார்தான் அவளென்று...?

இங்கே காத்திருந்து
கரையோரம் சிதறுகிறேன்
அவளுக்கான
தேடல் வரிகளை,

கொஞ்சம் வாசித்து
எந்தன் யாசிப்பை
புரிந்தவளாய்
வருவாளா...?

காத்திருக்கிறேன்
தேவதையே...

விரைவாய் வா
உன் நெஞ்சோடு
என்னை
அணைத்துக்கொள்ள...!

Ajaj Sunilkar Joseph 




திங்கள், 23 ஜூலை, 2018

சிகரெட்...




சிகரெட்...

முன்தின கவிதை
👇👇👇👇



தன் பிழைகளை 

படிய வைத்து விட்டு 

ஆவியாய் பறக்கிறது...

Ajai Sunilkar Joseph 



ணையாமல் பிடிக்கிறாய்

அதன் இறுக்கம் தெரியாமல்...?

Ajai Sunilkar Joseph 



புகையுது வெண்குச்சி

படியுது கருப்புப் ப(பு)கை...!

Ajai Sunilkar Joseph 




செத்தும் கெடுக்கிறார் 

இருவருடன் ஒருவர்...

Ajai Sunilkar Joseph 


ன்றென துவங்கி

ஒன்றன் பின் 

ஒன்றாக தொடங்குகிறது,

புகைப்பழக்கம்...!

Ajai Sunilkar Joseph 


By...