திங்கள், 29 ஜனவரி, 2018

கோடி மின்னல்கள் குடி கொண்ட கண்கள்....

கோடி மின்னல்கள்
குடி கொண்ட கண்கள்...


கோடி மின்னல்கள் கூடி வந்து
உன் கண்களில் குடி கொண்டதோ...!
பெண்ணே...!
                     உன் விழி பார்த்து 
என் வழி மறக்கின்றேன்,
கண்ணே...!
                 உன் இரு விழி,
உன் இமை வழி,
என்னிரு விழி நுழைந்து,
என் இதயத்தில்  காதல் கருவானதே...!
கண்ணால் கண்ணில் மாயம் செய்து,
உன்னால் என்னில் மாற்றம் செய்த நீயோ
மாயலோக சுந்தரியா...?
நீதான் மெய் தேவதையா...?
புரியாத எனக்கோர்
பதில் கூறடி கண்மணியே...!


By...Ajai Sunilkar Joseph


காணொளி



1 கருத்து:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!