புதன், 7 பிப்ரவரி, 2018

அவளைப் பார்த்தால் சொல்லி விடுங்கள்....

அவளைப் பார்த்தால் 
சொல்லி விடுங்கள்....



சாலையோரம் செல்லும் பூக்களே
என் இதயம் தேடும் 
பூ எங்கே சொல்லுங்கள்...
அவளைக் கண்ட நேரத்தில்,
என் நெஞ்சத்தின் ஓரத்தில்,
பாலைவனம் ஆனதே 
சோலைவனம் போலவே...!
அங்கே உதிரும் சருகுகளில்
அவளின் காலடிச் சத்தம் கேட்கவே,
கண்கள் கூட இமைக்காமல் 
காத்துக் கொண்டே இருக்கிறேன்,
பார்த்தால் சொல்லி விடுங்கள்
பாதகத்தி என்னை பாதையோரம்
காக்க வைத்து பாதி உயிரை எடுக்கிறாள்,
மீதி உயிரை வைத்துக்கொண்டு
மிஞ்சிய காதல் நினைவுகளை
அவளைக் கெஞ்சியே எழுதுகிறேன்
கரையோரம் சிதறிய கவிதைகளை,
வாசகியாய் வந்து காதல் யாசகத்தை புரிவாளா...!
புரிந்தும் புரியாமல் நடிப்பாளா...!
பூக்களாய் வந்து புன்னகை தருவாளா...!
புரியாமல் புன்னகையை பாறித்தே செல்வாளா...?


By...
Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!