வியாழன், 15 பிப்ரவரி, 2018

நீ எங்கே இருக்கிறாய்....?

நீ எங்கே இருக்கிறாய்...?



டபடவென பறக்கும்
பட்டாம்பூச்சியாய்
சில்லெனச் சிறகடித்தே
தேடுகிறேன் என்னவளை...!
எங்கே இருக்கின்றாளோ
தெரியவில்லை...!

என் வருங்கால மனைவியே...!
உன் விழிகளால் என் 
இதயத்தில் நீ நுழைய 
நான் காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!

உந்தன் விழியோடு
என் விழி வைத்து,
உன்னை மடியினில் சாய்த்து 
முத்தமிட காத்திருக்கிறேன்...
முத்தழகே நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னை உயிரிலே ஊற்றி 
உதிரமாய் உரு கொடுத்து
இழுத்தணைத்து இதழ்களில்
தேன் பருக காத்திருக்கிறேன்...
தேனமுதே நீ எங்கே இருக்கிறாய்...!

நீல வானில் 
வெள்ளை நிலவிடம்
உளறிக் கொட்டுகிறேன்,
உனக்கான கவிதைகளை
நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னோடு கொஞ்சி 
விளையாட கெஞ்சல்களாய் 
கவிதைகள் தொடர்கிறேன்...
பூலோக தேவதையே
நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னை
மாலையிட்டு மணமுடித்து,
நெஞ்சோடு மஞ்சம் வைத்து
மார்போடு சேர்த்தணைக்க
மன்னவனாய் காத்திருக்கிறேன்
என் மனைவியே நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னிடம் காதல் 
கொண்ட இதயத்தில்
உன்னை குடிவைக்க
காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!

விழிகளால் வீழ்த்தும் பெண்ணே
உன்னை கரம் பிடிக்கும் 
நாள்தான் எனக்கு காதலர்
தினமென காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!


                                                       -அஜய் சுனில்கர் ஜோசப்



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!