செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

எந்தன் இதய அஞ்சலி

எந்தன் இதய அஞ்சலி



கால்கள் முளைத்த
பூக்களில் ஒன்றாய்
எந்தன் இதயமதில்
இனிந்தாள் அன்று...!

அவளுடன் மணவறை
மணமோ கிடைக்கவில்லை
அதனால் மனதோடு
மணந்து விட்டேன்...

உள்ளத்தில் குடிவைத்து
உள்ளூரில் வாழ்கின்றேன்,

உள்ளத்தை உடையவளின்
உள்ளமதைக் கொண்டதினால்...!
அவளை மறப்பதற்கு மனமில்லாமல்
எந்தன் மனதோடு புதைத்து விட்டேன்...!

எந்தன் தாய்மொழி உதிர்த்து,
வார்த்தைகள் கோர்த்து,
என்னிதயக் கல்லறையில்
கவிதைகளாய் சேர்க்கின்றேன்,

கண்மணியவளின் காதலுக்காய்,
எந்தன் இதய அஞ்சலியாக...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

7 கருத்துகள்:

  1. தங்களது காதலி அஞ்சலிக்கு வடித்த அஞ்சலி நன்று

    பதிலளிநீக்கு
  2. காணொளியிலும் ரசித்தேன். நன்றாக வாசிக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!