திங்கள், 2 ஏப்ரல், 2018

மை விழியாள்...

மை விழியாள்...

ன் உயிரை ஊசலாட  
விட்டு எங்கே சென்றாய்...!
திரும்பித் திரும்பி உன்னைத்
திரும்பத் திரும்பத் தேடுகிறேன்,
விரும்பி என்னைப் பார்த்தாலென்ன
மையல் தந்த மைவிழியாளே...!
கண்ணில் காட்சி தந்து 
என் கண்ணை விட்டு 
மறைந்தாயே என் தேவதையே...!
என் தேவையெல்லாம் உன் 
அன்பே என் ஆருயிரே,
நீ சென்ற திசையெல்லாம் தேடுகிறேன் 
எங்கே இருக்கிறாய் என்று...!
சொல்லி விடு ஒரு வார்த்தை
என் தேடலின் வலிகளை
தவிர்த்து காத்திருப்பேன் உனக்காக...


By...Ajai Sunilkar 



காணொளி....



6 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!