ஞாயிறு, 13 மே, 2018

பூமியுள்ள காலமெல்லாம் சாமியாய்

பூமியுள்ள காமெல்லாம் சாமியாய்



மைக்குள் விழிபோல்
இரவும்,பகலும் என்னை
காத்த உன்னைப்போல்
இங்கே வேறாருத் தாயே...!
விழுந்த ஒரு துளி மழைநீரை
முத்தாய் காத்த சிப்பி போல்,
உனக்குள் வீழ்ந்த ஒருதுளி
உதிரத்தை இரத்தமும்,
சதையுமாய் உருகொடுத்து,
உந்தன் சுவாசத்தையே
உயிராய் கொடுத்த உன்னை
எப்படி காப்பேனோ...!
பூமியுள்ள காலமெல்லாம்
சாமியாய் வணங்கினாலும்
என்னைப் பெற்ற கடன் தீராதே...!
எனக்கான ஜென்மங்கள்
எத்தனையோ அத்தனை
ஜென்மங்களும் நீயே வேண்டும்
எனக்கே குழந்தையாக...
வரம்கொடு தாயே உன்னையே
நான் மீண்டும் பெற...!
என்னைக் கருவில் சுமந்த
அன்னையே உன்னை தினமும்
சுமக்கும் பாக்கியம் கொடு...
By...Ajai Sunilkar Joseph


அன்னையர்தின வாழ்த்துகளுடன்



9 கருத்துகள்:

  1. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,,/

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் தாயிடம் வேண்டும் அதே... வரம்.. கிடைத்தாலும் தீராக் கடன் தான்

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. அருமை நண்பரே.
    அன்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான சிறப்புக்கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!