வெள்ளி, 29 ஜூன், 2018

வேட்டையாடப்பட்ட என்னிதயம்

வேட்டையாடப்பட்ட என்னிதயம்....


சிறகடித்துப் பறந்தேன் பெண்ணே,
என்னைச் சிறைபிடித்துச் சென்றாய்,
உன் கள்ளமில்லாப் பார்வையால் 
என்னைக் கொள்ளையிட்டுப் போனாய்,
உன் விழிக்கூண்டுக்குள் என்னை
சிறைவைத்து என்னுயிரிலே உறைந்தாய்,
என்னுள்ளே நீ வந்த பின்னால்
நான் உனதாகிப்போனேன்,
எந்தன் தனிமைக்கதவைத் திறந்துத் 
தாழிட்டு விட்டு இப்போது நீ மட்டும் 
ஏன்தான் வெளியேற  முயல்கிறாயோ...!
மீண்டும் என்னைத் தனிமைத் தீவினில்
தள்ளிவிட்டு என் காதலைத் தீயினில்
கருக்கி விட நினைக்காதே...!
உன் நினைவுகளினால் என்னிதயம்
வேட்டையாடப்பட்ட பின்னால் 
என்னுயிர்  மொத்தமும் உந்தன் 
விழிவாள் வழி சொட்டுகிறதே
தெரியவில்லையா என் கண்ணே...!
நான் பாவமில்லையா பெண்ணே...!


Ajai Sunilkar Joseph

6 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!