திங்கள், 16 ஜூலை, 2018

சுவாசித்த காற்று எங்கே...?

சுவாசித்த காற்று எங்கே...?


முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇


நீரோடும் ஓடையோரம்
தென்மேற்கு பருவக்காத்து,
அடைப்பட்ட அறைக்குள்ளே
வீசுதே மின்சார காத்து...!

கம்மாக்கரை காத்துமிங்கே
காணாமல் போச்சே..!
குளிரும்,தளிரும் போய்
தேசம் சூடாகிப்போச்சே...!

ஆத்தங்கரை காத்தும் 
அழிந்தேதான் போச்சா...?
அனல்மூட்டும் காத்தும்
ஆள்வதும் ஆச்சா...?

தென்றலும் இங்கே
தீய்ந்தேதான் போச்சோ...?
தினந்தோறும் வெட்கை
தின்று விட்டுப் போச்சோ...?

பருவக்காத்தும் இங்கே 
திசைமாறிப் போச்சே...!
சுவாசக்காத்தும் இங்கே 
விஷமாகிப் போச்சே...!


Ajai Sunilkar Joseph


8 கருத்துகள்:

  1. நல்ல வரிகள். கவிதையை புகைப்படமாகவும் தொகுத்திருப்பது சிறப்பு. கூகிள் விளம்பரங்களை உங்கள் வலைத்தளத்தில் இணையுங்கள்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் பல நண்பரே,ஆனால் நீங்கள்
      சொல்வதுபோல் கூகிள் விளம்பரங்களை
      வலைத்தளத்தில் இணைக்கத்தெரியாதே,
      அப்படி இணைப்பதினால் பயன் என்ன...?

      சிகரம் தளத்திற்கு கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்...

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!