பைத்தியக்காரன்...
காற்றில் அசையும்போது
திசைகள் தேடும் பறவையாய்
உன்னைத் தேடுகிறேன்,
திரும்பிய திசையெல்லாம்
விரும்பிய உன் பிம்பம்
மட்டுமே காண்கிறேன்,
உன்னையே பிரதிபலிக்கச்
செய்யும் உன் ஞாபகக்
கண்ணாடிகளை அதிகம்
பார்த்து பாதிக்கப்பட்டுவிட்டேன்...
உன் உறவிழந்த பின்னால்
பெண்ணே...!
சிறகிழந்த பறவையானேன்,
நான் அழுதிடும் வலிகளை
எழுதிடும் வரிகளால் உனக்குத்
தொடுத்துப்போகிறேன்
கவிதை மாலையாக,
புரிவதும் பிரிவதும் உன்
உரிமை என்ற பின் உனக்கு
என் காதலை புரியவைக்க
முயற்சிக்கும் நான் உண்மையிலேயே
பைத்தியக்காரன்தான்...
Ajai Sunilkar Joseph
காணெளி
By...
-A
|
நல்ல கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு