வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பைத்தியக்காரன்...

பைத்தியக்காரன்...


காற்றில் அசையும்போது

திசைகள் தேடும் பறவையாய்

உன்னைத் தேடுகிறேன்,

திரும்பிய திசையெல்லாம்

விரும்பிய உன் பிம்பம்

மட்டுமே காண்கிறேன்,

உன்னையே பிரதிபலிக்கச்

செய்யும் உன் ஞாபகக்

கண்ணாடிகளை அதிகம்

பார்த்து பாதிக்கப்பட்டுவிட்டேன்...

உன் உறவிழந்த பின்னால்

பெண்ணே...!

சிறகிழந்த பறவையானேன்,

நான் அழுதிடும் வலிகளை

எழுதிடும் வரிகளால் உனக்குத்

தொடுத்துப்போகிறேன்

கவிதை மாலையாக,

புரிவதும் பிரிவதும் உன்

உரிமை என்ற பின் உனக்கு

என் காதலை புரியவைக்க

முயற்சிக்கும் நான் உண்மையிலேயே

பைத்தியக்காரன்தான்...

Ajai Sunilkar Joseph


காணெளி



By...
-A



2 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!