ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

என்னவென்று  நானெழுத  உனக்காக  வரிகளை...?

என்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...?



ன்னவென்று
நானெழுத
உனக்காக
வரிகளை...?

ஏதோ எழுத நினைக்கிறேன்
இருந்தும் மறந்து விடுகிறேன்,
ஏன்தான் என்று புரியவில்லை...!

இதயம் எழுதத்தூண்டுகிறது,
கைகள் எழுத மறுக்கிறது,
கைகள் எழுத நினைக்கிறது
ஆனால் இதயமோ உன்னை
சிந்திக்க மறுக்கிறது,

ஒன்று நினைக்க,
ஒன்று மறுக்க
உனக்கும் எனக்குமென
இடைவெளி மட்டும் நீண்டு
கொண்டே இருக்கிறது...

காரணம்தான்
என்னவென்று
விளங்கவில்லை,

என்னை நானே விசாரணைக்
கைதியாக்கி விசாரித்துப்பார்க்கிறேன்,
இவ்வழக்கின் தீர்ப்பொன்றும்
எனக்குக் கிடைக்கவில்லை,

இப்படி இருந்தால்
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

கனவுகளுக்குள்ளே
தத்தளிக்கிறேன்
பெண்ணே...
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

என்னோடு முடக்கிவைத்த
உன் ஞாபகங்களை
எடுத்துச்சென்ற பிறகு
நான் எரிக்கட்டையாய்
போன விறகு,

இதையறிந்த பின்னும்
எப்படிக் கேட்கிறாய்
உனக்கான வரிகளை...?

நெஞ்சில் கொள்ளி வைத்து விட்டு
வஞ்சி உன்னால் எஞ்சிய வலிகளை
மட்டும் கொஞ்சி விளையாடுகிறது
என்னுள் இருக்கும் இதயம்,

வலிகளை எனக்கு வரமாக்கி
விட்டு வார்த்தைகளை
சாபமாக்கிப் போன பிறகு
என்னவென்று நானெழுத
உனக்கான வரிகளை...?

Ajai Sunilkar Joseph 




3 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!