சனி, 3 நவம்பர், 2018

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...


நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன் கைகள் கோர்த்து,
உன் தோளோடு உரசி,
சற்றும் இடைவெளி விடாமல்,
கை விரல்களின் இறுக்கத்தில்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னிரு விழிகளிடம்
என் விழிகளால் பேசி,
உந்தன் காதுகளோரம்
கவிதைகளால் பேசி

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னைச் சிறைபிடித்த
பாவையுந்தன் நினைவுகளை
என் பாதையோரம் 
பரப்பி வைத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

பெண்ணே உன்னால் 
என்னில் பல கனவுகளைக்
கண்டெடுத்து என்னையே
நான் மீண்டெடுத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னை நித்தம் 
சித்திரவதை செய்யும்
உந்தன் நினைவுகளைத்
தேடித் தேடி நானும்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னைக் கண்டுபிடித்தும்
தொலைதூரம் மறையும் கானலாய்
நீ மறைந்து விடுவாயோ
என்ற பயத்தாலே நான் தனியாக

நெடுந்தூரம் நடந்து விடுகிறேன்...

Video





5 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!