என் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜூலை, 2018

என்னால் முறிந்த பேனா...

என்னால் முறிந்த பேனா...

ன் நிலமை கருதி

என் குருதி சிந்தி,

உன்னாலே உனக்காக

கவிதைகள் பல எழுதியும்,

உன்னால் நான் 

முறிந்தது ஏனோ...?

உன் காதலுக்குத்

தீர்ப்பு எழுதி விட்டாயோ...?



Ajai Sunilkar Joseph 



ஞாயிறு, 15 ஜூலை, 2018

கனவில் என் கற்பனை


கனவில் என் கற்பனை
முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇👇👇👇
தனிமையில் ஓர் பயணம்...
👆👆👆👆👆👆👆


ழி முத்துகள் இரண்டை
அவள் விழிகளாய் கண்டேன்,
ரசிக்கலாம் என்றே 
அருகினில் சென்றேன்,

குழிகள் இரண்டை
அவள் கன்னத்தில் கண்டேன்,
கொஞ்சம் வழுவி 
அதனுள் வீழ்ந்தேன்,

எழும்பிட நினைத்தேன்,
மயங்கியே கிடந்தேன்,
மங்ககை விழியும்,கன்னக்
குழியும் போதும் வீழ்த்திட...?

அவளோ பூஞ்சிலை 
போன்ற பெண்சிலை,
எனக்குத் தாரமான
தங்கத் தாமரையவள்,

அங்கத்தின் அழகை நான்
இன்னும் சொல்லவில்லை,
என்னில் ஓர் அங்கமாய்
அவள் இருப்பதினால்,

அன்பை அள்ளித் தந்திடுவாள்
அன்னைப் போல தாங்கிடுவாள்,
எனக்காய் வந்த தேவதை
எனக்கு மட்டும் தெய்வமவள்,

கண்களில் கனவு தேவதையாய்
அவளே எந்தன் கலங்கரையாய்,
கருப்போ,வெளுப்போ தெரியவில்லை
அவள் எங்கிருக்காளோ புரியவில்லை...



Ajai Sunilkar Joseph



By.....

                                 

திங்கள், 2 ஜூலை, 2018

காகிதத்திடம் என் காதல்

காகிதத்திடம் என் காதல்


பேனாவின் முத்தத்தடத்தில் 
பதிந்த வார்த்தைகளை நேசித்தாள்,
வலிகளுடன் நான் படைத்த
என் வரிகளை நேசித்தாள்,
அந்த வரிகளைப் படைத்த
என் கரங்களை நேசித்தாள்,
வரிகள் வழியே அவள் இதயம் 
நுழைந்த கவிதைகளை நேசித்தாள்,
என்னிதயம் வரிகளில் தொடுத்த
காதலை நேசித்தாள்,
இப்படியே அவளுள் சென்ற 
என்னை மொத்தமாய் வாசித்தாள்,
இவைகளை யாசித்த அவளோ
இறைவன் படைத்த வெள்ளைத்தாள்,
காகிதமாய் அவளிருக்க என் 
பேனாவின் ஒத்தடங்களாய் 
காதலைச் சொல்கிறேன்,
அவளிடமே என் வரிகள்
அனைத்தையும் படைக்கிறேன்,
அவளுக்கு என் இதயத்தில்
நான் காதல் படைத்ததால்...
-Ajai Sunilkar Joseph




திங்கள், 27 மார்ச், 2017

உன் மடியே போதுமடி...

உன் மடியே போதுமடி...


ன்னோடான பொழுதெல்லாம் 
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...

By...Ajai Sunilkar Joseph



காணொளி






திங்கள், 20 பிப்ரவரி, 2017

இதயம் செய்யும் துரோகம்...

இதயம் செய்யும் துரோகம்...


தயமே...
                 நீ எதற்காக துடிக்கிறாய்...?
எனக்காகவா...? அவளுக்காகவா...?
எனக்குள் இருந்து கொண்டு
அவளை நினைக்கிறாயே...!
இது துரோகம் தானே...!
ஹ்ம்ம்ம்...
                 அவளை விடவா நீ
துரோகம் செய்தாய்...!
என் இதயமே அவள்தானே...
அவளே அதைச் செய்யும்போது
நீ மட்டும் செய்யாமல்
இருப்பாயா என்ன....?


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

வியாழன், 19 ஜனவரி, 2017

பிச்சு போட்ட நெஞ்சம்...

பிச்சு போட்ட நெஞ்சம்...


நீ வாழ்ந்த போன
இவனது நெஞ்சில் 
இன்னொருத்தி
வாழ்ந்து போக இவன் 
மனம் வாடகை வீடா...?
அப்படி செய்தால் 
நீ பிச்சு போட்ட 
எந்தன் நெஞ்சம் எச்சில் 
பட்டதென அறிந்தால் 
அதிலே அவள்தான் 
வாழ்வாளா...?

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

புரிந்தாலும் பிரிவாயா...!

புரிந்தாலும் பிரிவாயா...!


ன் பெயரையே
              உச்சரித்த என்
இதயத்தை இறுக்கி,
              பிழிந்து என் 
காதலின்  உதிரத்தை 
              எடுத்தாயோ...!
என் இதயத்தை
              கொஞ்சம் வாசித்துப்
பாரடிப்  பாதகத்தி...
              அது யாசிக்கும் 
காதல் உனக்குப் புரியுமடி...!
               புரிந்தாலும் எனைப்
பிரிவாயோ...!
               பிரிந்தாலும் வருவாயா
பரிவாக...!

By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்     

வியாழன், 12 ஜனவரி, 2017

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...


வள் வந்த நேரம்,
இதயத்தின் ஓரம்,
துடிப்புகளின் வீரம்,
உள்ளுக்குள் பாரம்,
தந்தே போனாள் தூரம்,
பின்னர்...
                விழிகளின் ஓரம்,
இதயத்தின் ஈரம்,
காதலால் நொந்து,
கண்ணீராய் வந்து,
கன்னங்கள் குளிர்ந்து,
மண் மீது உதிர்ந்ததோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள் 


செவ்வாய், 10 ஜனவரி, 2017

பறிக்கப்பட்ட உரிமைகள்...

பறிக்கப்பட்ட உரிமைகள்...


கொடுக்கப்பட்ட உரிமைகள்
பறிக்கப்பட்ட போது மனதில்
வந்த வலிகள் என்னை
ரணங்களாய் கொன்று புதைக்கிறது...
இருந்தாலும்...
                       என்ன செய்வது உயிரே
வலிக்கேதும் உருவங்கள் 
கிடையாது அல்லவா...!
உருவமேதும் இருந்திருந்தால்
அதை நானே வென்றிருப்பேனே...!


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

திங்கள், 9 ஜனவரி, 2017

அனுமதி இல்லை போல...

அனுமதி இல்லை போல...



தேவதை (அவள்)
வாழும் இடத்தில்,
மனிதனாய் (நான்)வாழ
அனுமதி இல்லையென
தேவதையவளின்
பிரிவுக்கு பின்னே
புரிந்து கொண்டேன்...

By...Ajai Sunilkar Joseph





கரையோரம் சிதறிய கவிதைகள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

வண்ணம் இழந்த வானவில்...

வண்ணம் இழந்த வானவில்...


ண்ணங்கள் இழந்த
வானவில்லாய் அவள்...
ஓவியனாய் மாறி
ஒவ்வொரு நாளும்
வண்ணங்கள் தீட்டி,
என் காதல் தூரிகையால்
வருடி வந்தேனே...
ஏனோ அவள் கண்ணீரால்
அதை கரைத்தே விடுகிறாள்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

வியாழன், 29 டிசம்பர், 2016

பொய்யான நிலா...

பொய்யான நிலா...



காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து 
அவள் மன வானில்...
By....Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 28 டிசம்பர், 2016

என் தவம்....

என் தவம்....

யாருக்கு நீ வரமாக 
கிடைக்கப் போகிறாயோ 
எனக்குத் தெரியவில்லை,
நீ எனக்கு கிடைத்தால்
என்னை விட அதிக தவம் 
செய்தவர் யாருமில்லை...
By....Ajai Sunilkar Joseph




கரையோரம் சிந்திய கவிதைகள்



ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பூவே....

பெண் பூவே....



ண்டின் இரைச்சல் கேட்டு
புன்னகைக்க மறுத்தாயோ
என் ( பெண் ) பூவே...!
நீ புன்னகைக்க மறுத்ததால்
என் இதயப் பூந்தோட்டம்
வாடி மாண்டதை அறிவாயா...?
பெண் பூவே...!
உன் புன்னகை பார்க்க பூங்காற்றாய் 
உன்னை வருட வந்தேனடி...
புரிந்து கொண்ட நீயோ என்னை
முட்களாலே நெருடிச் சென்றாயடி...


Ajai Sunilkar Joseph






பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்...





வெள்ளி, 11 நவம்பர், 2016

அவள் வரவை எதிர்நோக்கி...

அவள் வரவை எதிர்நோக்கி...





வீசும் காற்றாய் வந்து
என் மூச்சாய் கலந்து
என்னிதயம் சேர்ந்தவளே...!
எங்கேதான் இருந்தாயோ...!
எனக்கெனதான் பிறந்தாயோ...!
நீ விட்டுச் சென்ற உந்தன்
சுவாசம் என்னுள் வந்து 
உன்னை எனக்கானவள் என்று 
உணர்த்துவது மெய்யா...? பொய்யா...?
புரியாத நானும் உன் வரவை 
எதிர்நோக்கி காத்திருக்கிறேன் 
அறிவாயா...?

பிரியமில்லாதவன் 
Ajai Sunilkar Joseph






 பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்



ஞாயிறு, 15 மே, 2016

உள்ளம் கொள்ளை கொண்டவள்...

உள்ளம் கொள்ளை கொண்டவள்...






அவளது வெட்கம் தந்து 
                            எந்தன் உள்ளம் 
கொள்ளை கொண்டாள்...
                            வெள்ளை உள்ளம் 
தந்து கவிதை ஒன்றை 
                            படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை 
                            தேவதையே உன்னை 
இழுத்தணைத்து உதட்டோரம் 
                            ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
                            வெட்கத்தால் கண்களை 
மூடி எந்தன் மார்பில் 
                            முகத்தை புதைத்துக் 
கொண்டவள் அங்கே
                            என் இதயம் சொன்ன 
கவிதைகளை கேட்டிருப்பாளா...!











Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 4 மே, 2016

முகநூலில் அவளின் அகநூல்

முகநூலில் அவளின் அகநூல்





முகநூலில் அகங்கள் பரிமாறியே

என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...

இணையத்திலோ இதயங்கள் பேச...

ஒரு முறையாவது நேரில் 

சந்திக்கலாமா என்று சிந்திக்க...

புகைப்படங்களின் பரிமாற்றத்தால்

சிந்தித்த சந்திப்பு கைநழுவ...

இதயங்களுக்கு இதமான நிழல் 

தரும் விருட்சமாய் காதல் வளர...

அந்த நிழலில் தானே அவளை

தேடி தவம் கிடக்கின்றேன்...

அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...

என்னுள் எனக்காய் தவம் கிடக்கும் 

தேவதை அவள்தான் வருவாளா...!

வந்து வரம்தான் அருள்வாளா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்