தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2017

வந்தாள் தை மகள்...

வந்தாள் தை மகள்...


"தை" மகளே வந்தாய்
புத்தாடைக் கட்டி
புதிதாக வந்தாய்,
இன்பங்கள் பொங்க 
இனியவைத் தந்தாய்,
அன்புதான் பொங்க
ஆவலாய் வந்தாய்,
துயரங்கள் நீக்க
துணிவுடன் வந்தாய்,
மார்கழிப் பனியை
மாற்றிட வந்தாய்,
தமிழர் பண்பாட்டை
பண்பாகத் தந்தாய்,
தமிழெங்கும் பொங்க
சந்தோஷம் தந்தாய்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள் 

திங்கள், 25 ஏப்ரல், 2016

தமிழே நமக்கு அடையாளம்...

தமிழன் என்ற பெருமைதான்

தமிழுக்கு இங்கு வறுமைதான்...!

பிற மொழி பேசிய நாவும்

இங்கு தமிழ் மொழி கூவும்...!

தமிழ் மொழி பேசிய நாவிதோ

பிற மொழி மட்டும் கூவுதோ...!

தமிழன் என்றால் கொதிப்புதான்

இங்கு தமிழுக்கில்லை மதிப்புதான்...!

கொஞ்சும் தமிழும் இங்கே

பொங்கும் தமிழும் இங்கே...!

தமிழே நமக்கு அடையாளம்

அதுவே நமது தன்மானம்...

இணையம் கூட தமிழ் பேசும்

தமிழன் மறுப்பான் தமிழ் பேச...!



Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழ் நம் தன்மானம்....

அம்மா , அப்பா என்று

அழைக்கும் செல்லத்

தமிழை விட்டு விட்டு...

ஆங்கிலம் தேடி போன

செல்வத் தமிழனே...

புரிந்து கொள் தமிழ்

நம் அவமானம் அல்ல...

தமிழ் நம் தன்மானம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 24 பிப்ரவரி, 2016

நம் தமிழ்...

பெற்றது தமிழ் அன்னை...

கற்றது தமிழ் உன்னை...

வளர்த்தது தமிழ் என்னை...

வாழ்த்தும் தமிழ் நம்மை...

உயர்த்தும் தமிழ் உண்மை...

உணர்வோம் தமிழ் அன்பை...

பகிர்வோம் தமிழ் பெருமை...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இணையத்தில் தமிழால் இணைவோம்....

இணையம் இல்லை என்றால்

இதயம் இல்லாமை போல

இன்றைய மனிதனின் எண்ணம்...

கைப்பேசியில் இணைய தளம்

கையில் பேசும் இதயம் போல...

இணையம் இல்லாமல் போனால்

கணையம் இழந்தவனாக வருத்தம்...

தொட்டால் தொடுதிரையில் இணையம்...

உன்னால் என்னால் வளரும் இணையம்...

வாடா நண்பா தமிழால் இணைவோம்...

உன்னால் என்னால் வளரும் இணையத்தில்...

தமிழை வளர்ப்போம் நம் இதயத்தில்...

இணையத்தை வாழ வைக்கும் நண்பா...

இதயத்தில் தமிழையும் வாழ வைப்போம்...

Ajai Sunilkar Joseph

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

எம்மொழி அது செம்மொழி

செந்தமிழ் நாட்டில் பிறந்து விட்டு...
நம்மொழி செந்தமிழை மறந்து விட்டு...
தமிழை அடி நாக்கில் புதைத்து விட்டு...
ஆங்கிலத்தை நுனிநாக்கில் விதைத்து விட்டு...
நம் தமிழை முற்றிலும் மறந்து விட்டு...
மழலை வாயிலும் ஆங்கிலத்தை நுழைத்து விட்டு...
செந்தமிழை மறைக்கும் தமிழர்களே...
எந்த மொழியினராயினும் வந்து பிழைக்கும்
செந்தமிழ் நாட்டில் தமிழ் பேச நாதியில்லையோ...?
தொலையும் மொழியா நம்மொழி...?
தொலைத்து விட்டால் நானும் நீயும் தமிழரா...?
செம்மொழி பேசிய வாயிலெல்லாம்
செந்தமிழ் புதைந்தேதான் போனதோ...?
வெள்ளையன் விதைத்த ஆங்கிலம்தான் துளிர் விடுதோ...?
துளிர் விடும் மொழியெல்லாம் செந்தமிழை தகர்ப்பதில்லை...
தமிழ் தமிழ் அது என் உயிர் மொழி...
தமிழில்லாமல் நானில்லை...

-அஜய் சுனில்கர் ஜோசப்