"தை" மகளே வந்தாய்
புத்தாடைக் கட்டி
புதிதாக வந்தாய்,
இன்பங்கள் பொங்க
இனியவைத் தந்தாய்,
அன்புதான் பொங்க
ஆவலாய் வந்தாய்,
துயரங்கள் நீக்க
துணிவுடன் வந்தாய்,
மார்கழிப் பனியை
மாற்றிட வந்தாய்,
தமிழர் பண்பாட்டை
பண்பாகத் தந்தாய்,
தமிழெங்கும் பொங்க
சந்தோஷம் தந்தாய்...
