விழி மனிதா விழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழி மனிதா விழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஆகஸ்ட், 2018

தாயகம் திரும்பிய பறவை...

தாயகம் திரும்பிய பறவை...


அன்பான இணைய சொந்தங்களுக்கு
அஜய் ன் அன்பான வணக்கங்கள்...

நான் எழுதும் கவிதைகளுக்கு பின்னணிப் படங்களை  
கவிதையை எழுதிய பின்னர் நானே படங்களை எடிட் 
செய்து அதன் மேலேதான் கவிதைகளை டைப் செய்வது வழக்கம்.

ஆனால் இன்று போட்டோஷாப் இல் மனமும் , கைகளும் 
போன போக்கில் ஒரு படத்தை எடிட் செய்தேன்,ஆனால் 
அதற்கான வரிகளை எவ்வளவோ சிந்தித்தும் புலப்படவில்லை,
வெறும் நால்சுவர் அறையில் தரையை வனாந்தரமாகவும்,
அதில் நானே நின்று சுவரில் மாட்டப்பட்ட ஒரு வயல்வெளிப்
படத்தையும், அதன் மேலே ஏசி யையும் பார்க்கிறேன்...
வெறும் கற்பனையாகவே இந்தப்படத்தில் வாழ்ந்துள்ளேன்,
இந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் இருந்தால் எப்படி வலித்திருக்கும்!
எனக்குத் தோன்றிய வரிகளை கீழே எழுதியுள்ளேன்,தவறுகள்
இருந்தால் தயவாய் மன்னிக்கவும் நண்பர்களே...!
(ஆனால் அந்தப்படத்தைப் பார்த்தால் ஏதோ மனம் வருந்துகிறது)
(படத்தை கீழே கொடுத்துள்ளேன்)

உங்களுக்கு ஏதாவது புலப்பட்டால் பின்னூட்டங்களில் 
தாருங்கள் அன்பர்களே...!



"இறக்கை அடித்தே அழகிய நாளை
நினைத்து வந்தேன்,

வேர்வை வழியே உதிரம் சொட்டி,
கற்றை பணத்தைக் கையில் எடுத்து,

எத்தனை காலம் ஏங்கி நின்றேன்
இல்லம் ஒன்றை வடிவமைக்க,

உற்றார் ஒன்றாய்,ஊரார் ஒன்றாய்,
வார்த்தைகள் அள்ளி வாழ்க்கையில் வீசி,

கட்டிய வீடு அழகாய்த் தெரிய,
ஆனந்தம் கொண்டேன் ஆழ்மனதில்,

வீடும் எனதாய்,வாழ்க்கையும் எனதாய்,
மனையில் வாழ மனைவியை தேடி,

அலைந்த தூரம் கொஞ்சமில்லை,
அழகாய் ஒருத்தி,அன்பாய் ஒருத்தி,

இரண்டும் ஒன்றாய் கிடைத்திட தவித்தேன்,
வருங்கால மனைவியாய் அவள் வந்தாள்,

நினைக்கும் நேரம் காணொளிப் பேசி,
கனிந்தே வந்தன வார்த்தைகள் கோடி,

மங்கை கழுத்தில் மாலைத் தொடுக்கும்
நாளும் நெருங்க , மணந்தும் கொண்டேன்,

நினைத்த நேரம்,நினைத்த வாழ்க்கை,
கொடுத்து வைத்த வாழ்க்கையாம் எனக்கு...!

ஹ்ஹ்ம்ம்....

வாழ்த்திய நெஞ்சங்கள் பலருக்கும் நன்றிகள்
சொல்லி வழியனுப்பி விட்டேனேத் தவிர,

அலாதி அன்பை இழந்த துக்கம்
மட்டும் என்னை விடாமல் துரத்த,

அயலகம் சென்றேன் உழைப்பதற்காக,
தாயகம் வந்தேன் பிழைப்பதற்காய்,

வாயடைத்துப் போய்,வருந்தி நின்றேன்,
என் பசுமை நிலத்தைப் படமாய் பார்த்து...!

காற்றையும் எனது கற்றைப்பணத்தில்
அறையில் அடைத்து விட்டேன்,

என் தந்தையின் விவசாய நிலம் எங்கே...?
அது படமாகத் தொங்குது இங்கே...!

தாயகம் திரும்பிய பறவைக்கு
அமர்ந்திளைப்பாற ஓர் பூவனம் இல்லை,

சோலையெல்லாம் சாலையாய்,
நான் வாழ்ந்த பூமியே பாலையாய,

காண்கிறேன் கண் முன்னே
உயிருடன் சாகிறேன் இங்கே...!"

Ajai Sunilkar Joseph 



By...

வியாழன், 26 ஜூலை, 2018

தேடித்திரிய நாதியுண்டோ...?

தேடித்திரிய நாதியுண்டோ...?

முந்தைய கவிதை
👇👇👇


"ந்தக்கவிதையை எழுதி வைத்து நெடுநாட்கள்
ஆகிவிட்டது , அதை பதிவிட இன்றுதான் அதற்கு
விதி வழி விட்டது போல..!

இது "மழை" இல்லாமல் வறட்சியை சந்தித்த பூமியை
பார்த்து தன் தலையை சாய்த்து உயிர் மாய்த்த தென்னை
மரங்களைப் பார்த்து மனம் நொந்ததினால் எழுதி வைத்தேன்,

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னால் பெய்த "மழை"கடந்த
ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் பெய்திருந்தால்
இந்த வருத்தம் வந்திருக்குமா...?

இதற்கு காரணம் யார்...?

அதையே இந்தக்கவிதையில் எழுதியுள்ளேன்,
பிழைகள் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்🙏"



ச்சி வெயிலில்
காயும் தென்னை
மண்ணை மஞ்சமாக்கி
சாயுதே இங்கே...!

காணாமல் போன
மாரியும் எங்கே...!
தேடித் திரிய
நாதியும் உண்டோ...!

மாரி மிதக்கும்
கார்முகில் எங்கே...!
சுட்டெரிக்கும் சூரியனால்
தீய்ந்தே போனதோ...

வெட்டும் மரங்களின்
கொட்டும் சாபத்தால்,
தூரத்தின் சூரியன்
பக்கத்தில் ஆனதால்,

சோலை வனமெங்கும்
பாலைவனம் ஆனது
சினம் தணியா ஆதவனின்
சுட்டெரிக்கும் தீ கதிராலோ...!

மெய்ஞானம் மறந்து
விஞ்ஞானம் வளர்த்து
வீண் ஞானம் கொண்ட
மதிகெட்ட மாந்தர்களாலோ...!


இதற்கு நாமும் விதிவிலக்கல்ல,ஒரு மரம் இடையூறு என்றால் அதே வேருடன் வெட்டுவதில் நாமும் கில்லாடிகளே...
அதில் நானும் ஒருவன் என்பதால் வெட்கப்படுகிறேன்.

கீழ்காணும் புகைப்படம் கைப்பேசியில் க்ளிக்கியது , எங்கள் வீட்டுப்பக்கம் எத்தனையோ தென்னை மரங்கள்
மாண்டு போயின,இந்தப் புகைப்படத்தில் காண்பது
ஓரிடத்தில் மொத்தமாக மாண்ட தென்னைமரங்கள்,
சாதாரணமாக புகைப்படம் தெளிவாக வரும்,இது
Panorama Option இல் க்ளிக்கியதால் கொஞ்சம் தெளிவு கம்மியாகவே இருக்கும்.
Ajai Sunilkar Joseph







திங்கள், 23 ஜூலை, 2018

சிகரெட்...




சிகரெட்...

முன்தின கவிதை
👇👇👇👇



தன் பிழைகளை 

படிய வைத்து விட்டு 

ஆவியாய் பறக்கிறது...

Ajai Sunilkar Joseph 



ணையாமல் பிடிக்கிறாய்

அதன் இறுக்கம் தெரியாமல்...?

Ajai Sunilkar Joseph 



புகையுது வெண்குச்சி

படியுது கருப்புப் ப(பு)கை...!

Ajai Sunilkar Joseph 




செத்தும் கெடுக்கிறார் 

இருவருடன் ஒருவர்...

Ajai Sunilkar Joseph 


ன்றென துவங்கி

ஒன்றன் பின் 

ஒன்றாக தொடங்குகிறது,

புகைப்பழக்கம்...!

Ajai Sunilkar Joseph 


By...




வெள்ளி, 20 மே, 2016

ஒளி இழந்த விழிகள்

ஒளி இழந்த விழிகள்...




ளி இழந்த விழிகளுக்கு
பிழைக்க ஒரு வழி இல்லையே
வழியோரம் பாடுகிறோம்
வயிற்றுப் பிணி போக்கிடவே...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வியாழன், 10 மார்ச், 2016

சிறந்த தலைவன்...

மீண்டும் ஒரு முறை இந்த
வரிகளை பதிவு செய்கிறேன்...

இலவசம் ஏனோ

இவன் வசம் இல்லை...

இவன் கண்களில் ஏனோ

தூக்கமும் இல்லை...

காரணம் தானோ

சுயநலம் இல்லை...

இவன் குருதி கொதிப்பதோ

பொதுநலன் கருதி...

குடும்பத்தின் கவலை ஒருபக்கம்...

நாட்டு மக்கள் கவலை மறுபக்கம்...

மக்கள் பஞ்சம் தீர்க்க

இவன் நெஞ்சம் பதறும்...

இவனே சிறந்த தலைவன்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 20 பிப்ரவரி, 2016

குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும் விழிக்கமாட்டாயோ...!!!

குடி குடி மனிதா உன்

குடி கெடும்வரை குடி...

குடித்து நீ தள்ளாட

குடியால் உன் குடி தள்ளாட...

என்னை நீ குடித்து முடிக்க

உன் குடியை நான் கெடுத்து முடிக்க...

உன் வருமானம் சாராயம் தேடி

உன் தன்மானம் அவமானம் தேடி...

உன்னால் அரசின் குடி வளர

பின்னால் உன் குடும்பம் குடி தளர...

குடித்து உன் குடல் வேக

குடியால் உன் குடி மூழ்க...

குடி குடியென்று நீ குடி தேடி

பொண்டாட்டி தாலி அடகுக்கடை தேடி...

குடி பொருள் விற்றுக் குடி

உன்னை கல்லறைக்குடி வைக்கக்குடி...

குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும்

உன் குடியை வாழ வைக்க மாட்டாயோ....!!!

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph