அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அம்மா

அம்மா

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇
உனக்கான கவிதைகள்

லகம் காணும் முன்னே

உன்னில் நானே

உதயமாகிப் போனேன்,

அம்மா நீதான் என்னைத்

தாங்கிக்கொண்டாய்,

எனக்கு மறு ஜென்மம்

என்று ஒன்றிருந்தால்

எனக்கே மகளாகி விடு...!

என் தவமாகி விட்டாய்

நீயே எனக்கு வரமாகிடு...!
Ajai Sunilkar Joseph 

By...



ஞாயிறு, 22 ஜூலை, 2018

அம்மா...

அம்மா


ன்னை உருவில் 

காணுமுன்னே 

கருவில் கொண்டவள்

அம்மா...!

Ajai Sunilkar Joseph


நான் பிறந்ததும் 

ஆனந்த வானில்

பறந்திருப்பாள் 

அம்மா...!


Ajai Sunilkar Joseph 


காற்றை  முந்தாணைக்குள்

வடிகட்டி சுவாசிக்கத் தந்த

மூன்றெழுத்து மந்திரம்

அம்மா...!

Ajai Sunilkar Joseph


நான் இறைவன் 

படைப்பாயினும்

வலியடைந்தவள்

நீதானே...

அம்மா...!


Ajai Sunilkar Joseph 



வள் இரத்தம் கொஞ்சம்,

அவள் சதையில் கொஞ்சம்,

அவள் சுவாசம் கொஞ்சம்,

அவள் பாசம் கொஞ்சம்,

அவள் ஏக்கம் கொஞ்சம்,

அவள் பரிதவிப்பு கொஞ்சம்,

அவள் வலியில் கொஞ்சம்,

அவள் உணர்வில் கொஞ்சம்,

அவள் உயிரில் கொஞ்சம்,

அவள் அழுகயில் கொஞ்சம்,

அவள் கண்ணீரில் கொஞ்சமாய்,

அனைத்திலும் பிய்த்தெடுத்த

மிச்சமே நான்...


Ajai Sunilkar Joseph 









சனி, 30 ஜூன், 2018

கருவில் நான்


கருவில் நான்...


யாரும் என்னைப் பார்க்கவில்லை
சிறு துளி உதிரமாய் இருளிலே 
மூழ்கி விட்டேன்,

பலகோடி அணுக்களிலே நான் 
மட்டும் அந்த சிம்மாசனத்தை 
அடைந்து விட்டேன்,

எனக்குள் அவ்வளவு சந்தோஷம்  
என்னவென்றால் இவள் 
என்னைக் காணமலே ரசிக்கிறாள்,

நான் அங்கிருந்து உதைத்தாலும் 
உள்ளே மூச்சிழுத்து எனக்கு 
சுவாசம் தருகிறாள்,

மூழ்கி விட்டேன் என்றேனல்லவா...?
கருவில் சிசுவாய் அவளின்
உள்ளே உரு பெறுகிறேன்,

என்னை மூச்சடக்கி அடைகாத்துக் 
கொண்டிருக்கிறாள் இந்த 
பூவுலக தேவதை,

எங்கேயும் முட்டாமல்,மோதாமல்
என்னைத் தாங்கிய படியே 
நடந்து செல்கிறாள்,

இவளின் உன்னதமான அன்பை
இப்போது நான் மட்டுமே அறிவேன்,

ஆனால் இவள்  அடிக்கடி
சோர்ந்து போகிறாள்,
காரணம் நானென்று அறிகிறேன்,

இருந்தாலும் நான் என்ன 
செய்வேன் இப்போது...?

இன்னும் கொஞ்ச நாள்தான் 
என்று சொல்ல நினைக்கிறேன்
ஆனால் முடியவில்லை,

நான் சீக்கிரமாய் வெளிச்சத்தில் 
வந்து விடுவேன் என்று 
தோன்றுகிறது இன்று,

இவள் யார் எனக்கு...?
சொல்லித்தர யாருமில்லை,

ஆனால் கண்டிப்பாக வெளியே 
வந்ததும் கத்திவிடுவேன் அம்மாவென்று....



By....
-Ajai Sunilkar Joseph


ஞாயிறு, 13 மே, 2018

பூமியுள்ள காலமெல்லாம் சாமியாய்

பூமியுள்ள காமெல்லாம் சாமியாய்



மைக்குள் விழிபோல்
இரவும்,பகலும் என்னை
காத்த உன்னைப்போல்
இங்கே வேறாருத் தாயே...!
விழுந்த ஒரு துளி மழைநீரை
முத்தாய் காத்த சிப்பி போல்,
உனக்குள் வீழ்ந்த ஒருதுளி
உதிரத்தை இரத்தமும்,
சதையுமாய் உருகொடுத்து,
உந்தன் சுவாசத்தையே
உயிராய் கொடுத்த உன்னை
எப்படி காப்பேனோ...!
பூமியுள்ள காலமெல்லாம்
சாமியாய் வணங்கினாலும்
என்னைப் பெற்ற கடன் தீராதே...!
எனக்கான ஜென்மங்கள்
எத்தனையோ அத்தனை
ஜென்மங்களும் நீயே வேண்டும்
எனக்கே குழந்தையாக...
வரம்கொடு தாயே உன்னையே
நான் மீண்டும் பெற...!
என்னைக் கருவில் சுமந்த
அன்னையே உன்னை தினமும்
சுமக்கும் பாக்கியம் கொடு...
By...Ajai Sunilkar Joseph


அன்னையர்தின வாழ்த்துகளுடன்



ஞாயிறு, 22 மே, 2016

முத்தழகு மழலை

முத்தழகு மழலை


 துளி உதிரம்
                  சிறு துளியாகி...
கருப்பை சென்று...
                  கர்ப்பம் கொண்டு...
மாதங்கள் சில 
                  மூச்சடக்கி பெத்தெடுத்த
முத்தழகு நீயோ...!










பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 10 மே, 2016

தவத்தின் பலன் பொய்யூரா...?

தவத்தின் பலன் பொய்யூரா...?



பத்து மாதம் தவமிருந்தாள்

வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...

அவளின் உள்ளே தவமிருந்தேன்

எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...

தவத்தின் பலனாய் என்னை கண்டு

கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...

மழலை மொழியாய் மொழிந்தேன்

நானும் அவளின் முகத்தை கண்டு...

பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...

அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...

என்னை அவளின் மகன் என்று...









Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்