விவசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 அக்டோபர், 2016

சோறு போட்ட மண்

சோறு போட்ட மண்




ஞ்சை,புஞ்சை
              என்று விளைந்த
எங்கள் மண்ணின்
              நெஞ்சை பிளந்து
நஞ்சு விதைக்கும் 
              திட்டங்கள் வேண்டாம்.
எம் அரசே...
              சோறு போட்ட மண்ணை
கூறு போடுவதுதான் ஏனோ...!
              மூன்று வேளை சோறு
தின்றும் போட்டாயோ கூறு...!!!



Ajai Sunilkar Joseph







வியாழன், 14 ஏப்ரல், 2016

அறிந்தும் அறியாமை...

வலையுலகில் மலர்ந்த நட்பூக்கள்
அனைவருக்கும் பிரியமில்லாதவனின்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...




விதைகளை சிதற விட்டு

வியர்வையும் சிந்தி விட்டான்...

வயலெங்கும் ஆனதே செழுமை...

விவசாயி வீட்டிலோ வறுமை...

நம் நாட்டுக்கோ இது

அறிந்தும் அறியாமை...

இவனளித்த உணவு ருசிக்கும்...

ஆனால் இவன்பணி கசக்கும்...

என்றைக்கு இவன்பணி ருசிக்குமோ...

அன்றே நம்நாடு திருநாடு...

அதுவரை இது நம் திருடர் நாடே..!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

வேர்வைத் துளி

இயற்கை உர

                வரிசையில் உன்

வேர்வைத் துளிகளும்

                 சேர்க்கப் பட்டதோ...!

நெற்கதிர்கள் இத்தனை

                 செழிப்பாக வளர்ந்து

நிற்க்கின்றதே உன்

                 வேர்வைத் துளிகளில்...

Ajai Sunilkar Joseph

ிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com