சுவாசித்த காற்று எங்கே...?
முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇
நீரோடும் ஓடையோரம்
தென்மேற்கு பருவக்காத்து,அடைப்பட்ட அறைக்குள்ளே
வீசுதே மின்சார காத்து...!
கம்மாக்கரை காத்துமிங்கே
காணாமல் போச்சே..!
குளிரும்,தளிரும் போய்
தேசம் சூடாகிப்போச்சே...!
ஆத்தங்கரை காத்தும்
அழிந்தேதான் போச்சா...?
அனல்மூட்டும் காத்தும்
ஆள்வதும் ஆச்சா...?
தென்றலும் இங்கே
தீய்ந்தேதான் போச்சோ...?
தினந்தோறும் வெட்கை
தின்று விட்டுப் போச்சோ...?
பருவக்காத்தும் இங்கே
திசைமாறிப் போச்சே...!
சுவாசக்காத்தும் இங்கே
விஷமாகிப் போச்சே...!
![]() |
| Ajai Sunilkar Joseph |

















