கரையோரம் சிதறிய கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரையோரம் சிதறிய கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூலை, 2018

சுவாசித்த காற்று எங்கே...?

சுவாசித்த காற்று எங்கே...?


முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇


நீரோடும் ஓடையோரம்
தென்மேற்கு பருவக்காத்து,
அடைப்பட்ட அறைக்குள்ளே
வீசுதே மின்சார காத்து...!

கம்மாக்கரை காத்துமிங்கே
காணாமல் போச்சே..!
குளிரும்,தளிரும் போய்
தேசம் சூடாகிப்போச்சே...!

ஆத்தங்கரை காத்தும் 
அழிந்தேதான் போச்சா...?
அனல்மூட்டும் காத்தும்
ஆள்வதும் ஆச்சா...?

தென்றலும் இங்கே
தீய்ந்தேதான் போச்சோ...?
தினந்தோறும் வெட்கை
தின்று விட்டுப் போச்சோ...?

பருவக்காத்தும் இங்கே 
திசைமாறிப் போச்சே...!
சுவாசக்காத்தும் இங்கே 
விஷமாகிப் போச்சே...!


Ajai Sunilkar Joseph


ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

குட்டி கவிதைகள்

குட்டி கவிதைகள்


ஒருநாள்

சூரியனின் சிமிட்டல்
பொழுதினில் ஒரு
இரவு கடந்தது...!

By...Ajai Sunilkar Joseph



ராணுவ வீரன்

னைத்தும் 
இருந்தும்
தன்னையே 
அர்பணித்தான்,
நாட்டுக்காக...!

By...Ajai Sunilkar Joseph


நிலவே...

ணியா 
தாகமோ,
நீரில் மூழ்கிக் 
கிடக்கிறாய்...!

By...Ajai Sunilkar Joseph


மகிழ்ச்சி

திர்ந்த
போதெல்லாம் 
மகிழ்ந்தன,
விதைகள் 
தந்த பூக்கள்..!

By...Ajai Sunilkar Joseph


வெட்கம்

நாணம் கொண்ட 
நாயகியே
காற்றில் 
அசையும் 
நாணலானேனடி...!

By...Ajai Sunilkar Joseph


(அன்பு நண்பர் ஸ்ரீ ராம் காதல் கவிதைகள் தவிர்த்து வேறு கவிதைகள் எழுத சொல்லியிருந்தார் எனது முந்தைய பதிவில் ,அதனால் சிறிய முயற்சியில் கிடைத்த வரிகளை இங்கு பதிவிடுகிறேன்.)

நன்றி நண்பர்களே...!


கரையோரம் சிதறிய கவிதைகள்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

விழியழகே...!


விழியழகே...!

கோடி வானவில்
கூடி வந்து
உன் கண்ணுக்கு 
கருமை ஆனதோ...!

By...Ajai Sunilkar Joseph


மின்னழுத்தம்

ன் விழிகளின் 
உயர்மின்னழுத்தத்தால்
என் இதயத்தைக் 
குடிக்கும் மின்சாரம்
நீயடி...!

By...Ajai Sunilkar Joseph


வெள்ளைப்பூவே...!

பார்வையால்
வெளிச்சம் வீசி
என்னைக் கொள்ளைக்கொண்ட
வெள்ளைப்பூவே...!
உன் செவ்வாய் மலர்ந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசி விடு...

By...Ajai Sunilkar Joseph


என்னை அபகரித்த நினைவுகள்

ந்தன் இதயத்தை 
அபகரிக்கும் உந்தன் 
நினைவுகளை தட்டியெறிந்துப்
பார்க்கிறேன்,
ஒவ்வொன்றும் 
இரண்டிரண்டாய்
என்னைப் புரட்டிப்போட்டுக்
கொல்லுதடி...!

By...Ajai Sunilkar Joseph


அகலாய் அவள் விழிகள்

கலும் அகலாய் 
அவளிருக்க,
அவளில் அகலாய் 
அவள் விழியிருக்க,
விழுந்தேன் அவளிடம் 
எண்ணெயாய்,
காதல் தீபம் ஏற்றிவிட...!

By...Ajai Sunilkar Joseph





கரையோரம் சிதறிய கவிதைகள்


வியாழன், 1 ஜூன், 2017

பிறவிப்பலனை அடைவேனடி...

பிறவிப்பலனை அடைவேனடி...


நெஞ்சத்தில் மஞ்சம் வைத்து
கொஞ்சமாய் கொஞ்சி சென்று 
என்னிதயத்தை மிஞ்ச வைத்து,
அதிலே எஞ்சி நின்ற என் 
இதயக் காதலின் வஞ்சி மலரே...
அதில் நீதானடி என்னுயிரே...
நானே உனக்குத் தாலிகட்டி
உன் நெஞ்சில் ஆட வைத்து,
என் நெஞ்சை மஞ்சமாக்கி
உன்னைக் கொஞ்சி உறங்க 
வைத்தால் என் பிறவிப்பலனை
அடைந்தே விடுவேனடி...
என் காதல் கண்ணம்மா...

By...Ajai Sunilkar Joseph




வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...


ன் விழியோரம்
                          வழிந்த கண்ணீரால்,
உன் இதயத்தின்
                          ஸ்பரிசம் உணர்ந்தேனடி...
என்னவளே உன்னைக் காணாமல்,
                          என்னிதயம் உன்னைச் சேராமல்,
மண்ணோடு மண்ணாய் போவேனோ...!
                          என்ற ஏக்கம் என்னைக் கொல்கிறது,
கண்ணிருந்தால் கொஞ்சம் 
                          வாசித்துப் போடி...
உன்னிடம் நான் யாசிக்கும் என் காதலை...



By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 18 ஜனவரி, 2017

சிதைந்த கனவுகள்...

சிதைந்த கனவுகள்...


நீ என்னை உதறி
விட்ட பிறகும்,
உன் காலில் படிந்த 
தூசியாய் பிரிய
மறுக்கும் என்னை,
ஏனடி இந்த காதல்
கரையோரத்தில் 
எந்தன் நெஞ்சம்
கதற,கதற என் 
கனவுகளை சிதைத்து
கவிதைகளாக சிதற வைத்தாய்...!

By...Ajai Sunilkar Joseph



 கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 7 ஜனவரி, 2017

நீ என்றால் பிடிக்கும்...

நீ என்றால் பிடிக்கும்...


ண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

மறக்க முடியாமல் மரத்த இதயம்....

மறக்க முடியாமல் மரத்த இதயம்....


லிகளை மறக்க,
விழிகளை மூடி,
வழிகளை தேடினேன்...
மௌன மொழிகள்
பேசும் தேசம் சென்று,
கொஞ்சமாக கதறி,
கரையோரம் சிதற
விட்டேன் கவிதைகளை...
அந்த நொடிப்பொழுதே 
வலிகள் மறைந்தது,
வலிகள் தாங்கிய 
இதயமும் மரத்தது...

By....Ajai sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்