புதன், 27 ஏப்ரல், 2016

மஞ்சரி மற்றும் மாலினி - 1

அன்பான வலையுலக நண்பர்களுக்கு
பிரியமில்லாதவனின் பிரியமான வணக்கங்கள்...
முதன் முதலாய் முயற்சி செய்து
இந்த கதையை துவங்கியுள்ளேன்...
கதையை படித்து விட்டு தங்கள்
கருத்துகளை  சொல்லுங்கள்...

மஞ்சரி மற்றும் மாலினி - 1



அடியே மாலினி விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆவுதே சீக்கிரம் எந்திரிடி என்று அவசரமாய் 
கத்தினாள் மாலினியின் தாய் மஞ்சரி...


ஆம் மாலினி வேறு யாரும் அல்ல
இந்தக் கதையின் நாயகிதான்...


ஏன் தன் மகளை அவசரமாய் கூப்பிடுகிறாள்
என்று அப்புறமாக சொல்கிறேன்...
முதல் மஞ்சரியை குறித்து பார்ப்போம்...

அந்த ஊரில் முத்தைய்யா என்று ஒரு
பணக்காரர் இருந்தார்...

அவரை காதலித்தவர் பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு திருமணம் செய்து 
முத்தைய்யாவை பிரிந்து விட்டார்...

இது முத்தைய்யாவுக்கு பெரிய 
ஏமாற்றமாக இருந்தது...
இதிலிருந்து முத்தைய்யாவுக்கு 
பெண்கள் எனெறாலே வெறுப்பு...
ஆனால்....
                  முத்தைய்யாவின் பெற்றோரின் 
வற்புறுத்தலின் பெயரில் முத்தைய்யாவும் 
திருமணம் செய்து கொண்டார்...

ஆனால் தன் மனைவி செல்வியை நன்றாகவே அடிப்பார் உதைப்பார் 
கொடுமை படுத்துவார்...

முத்தைய்யாவின் கொடுமை 
எல்லாம் தாங்கிய செல்வி 
பெற்றெடுத்த அழகு சிப்பிதான் மஞ்சரி...

முத்தைய்யாவுக்கு பெண்கள் மேலிருந்த
வெறுப்புதான் என்னமோ மகள் மஞ்சரியின்
மேல் துளியளவும் பாசமில்லாத காரணம்...

தன் மனைவி பெண் பெற்றாள் என்றே
விசேஷமாக சித்திரவதை செய்வார்...

முத்தைய்யா என்றால் அவரது ஜாதியே
அவருக்கு கட்டுப்பட்டு நிற்கும்...

அவளவு ஜாதிப் பிரியர் இல்லை வெறியர்...

எந்த ஜாதி என்று கேட்க வேண்டாம்...

அது சாணி போல நாறும்...

அதனால் கதையை மட்டும் பார்ப்போம்...

மஞ்சரிக்கோ மருத்துவர் ஆக வேண்டும்
என்பதே கனவாய் இருந்தது...

அதனால்தான் அவள் நினைத்தது கனவாய் கலைந்ததோ...!

தன் மகள் +2 வில் அதிக மதிப்பெண் 
பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தாலும் அவளை மேலே படிக்க 
விடாமலே இருந்தார் முத்தைய்யா...

அவரை ஊரே பணக்காரன் என்று சொன்னாலும்...

தன் மகள் வாழ்க்கையில் கஞ்சனாகவே இருந்து
மஞ்சரியின் படிப்பில் மண் அள்ளியே போட்டார்...

காரணம் பெண் என்றாலே அவருக்கு பிடிக்காதாம்...

அப்போ எதற்கு பெண் பெற்றாய் என்று கேட்டால்
அன்று மனைவி செல்விக்கு கொடுமையும்
சித்திரவதையும் தான் மிஞ்சும்...

பெண் பெற்றாள் செல்வி அதனால்தான்
மகளுக்கு இல்லை கல்வி...

மஞ்சரியோ தன் தாய் படும் கொடுமைகளை
பார்த்து மேலே படிக்க வேண்டும் என்ற
எண்ணத்தையும் விட்டு விட்டாள்...

படிக்க ஒருத் தடையா என்று நினைத்து நினைத்து
தன் உள்ளத்தையே உடைத்து விட்டாள்...

அன்பான மஞ்சரியின் மனமோ அகதி போல
சுற்றியே வந்தது தன் ஆசை வைத்த மருத்துவ படிப்பின் மேலே...

மஞ்சரியும் தன் படிப்பை மறந்து இல்லை இல்லை
அந்த எண்ணங்களை மனதினுள்ளே புதையலாய் புதைத்து விட்டாள்...
                                                   (தொடரும்...)          

திங்கள், 25 ஏப்ரல், 2016

தமிழே நமக்கு அடையாளம்...

தமிழன் என்ற பெருமைதான்

தமிழுக்கு இங்கு வறுமைதான்...!

பிற மொழி பேசிய நாவும்

இங்கு தமிழ் மொழி கூவும்...!

தமிழ் மொழி பேசிய நாவிதோ

பிற மொழி மட்டும் கூவுதோ...!

தமிழன் என்றால் கொதிப்புதான்

இங்கு தமிழுக்கில்லை மதிப்புதான்...!

கொஞ்சும் தமிழும் இங்கே

பொங்கும் தமிழும் இங்கே...!

தமிழே நமக்கு அடையாளம்

அதுவே நமது தன்மானம்...

இணையம் கூட தமிழ் பேசும்

தமிழன் மறுப்பான் தமிழ் பேச...!



Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 23 ஏப்ரல், 2016

கோபம் வேண்டாம் கண்மணியே...

நுரைகள் பொங்கும்

                         அலைகள் கூட

கரையில் கொஞ்சம்

                         மோதிச் செல்லும்...

கரைகள் என்ன

                         கோபித்தா கொள்ளும்...

கரையில் உன்னிடம்

                         நேசம் வைத்த

எந்தன் சுவாசம்

                         உன்னைக் கொஞ்சம்

கொஞ்சும் போது...

                         மெல்லமாய் உன்னைத்

தீண்டிச் சென்றால்...

                         கோபம் வேண்டாம்

காதல் கண்மணியே...


Ajai Sunilkar Joseph பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வலையுலக நட்பர்களே நான் ஒரு
தொடர்கதை எழுத துவங்கியுள்ளேன்....
ஆனால் எனக்கு கதை எழுதியே பழக்கமில்லை...
இதிலே தொடர்கதை வேறேயா...!
வருகிற நாட்களில் தொடர்கதையை
இதே தளத்தில் பகிர்ந்து கொள்ள
சிறிய ஆவலாய் உள்ளேன்....
கதையை பகிரலாமா என்று உங்கள்
கருத்துகளை எனக்கு தாருங்கள் நட்பர்களே...

(கதை ஒரு உண்மை சம்பவம்
ஆனால் கற்பனைகள் சேர்க்கப்பட்டது)

புதன், 20 ஏப்ரல், 2016

அகதியான இதயத்தில் அவளே கைதி...

கண்ணால் என்னை கடத்தி

சென்றாள் மெல்ல ஒருத்தி...

காதல் வசியம் செய்து

இதயம் எடுத்தாள் கொய்து...

என்னிதயத்தில் அவளே நின்று

கட்டினாள் காதல் சிறையொன்று...

இதயம் அவளிடம் அகதியாய்

அதனுள் அவளே கைதியாய்...

இரவும் பகலும் காவல்

காத்தே செய்தேன் காதல்...

நித்தம் நித்தம் நினைவுகள்

தந்தாள் எந்தன் நெஞ்சுக்குள்...

கண்ணால் காதல் தருகிறாள்

இதயத்தில் அடைந்து கிடக்கிறாள்...



Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விழிகள் தந்த வினாத்தாள்...

காதல் தேர்வினில் அவள்

விழிகள் தந்த வினாத்தாளுக்கு...

அவளின் மனத்தாளினில் விடைகள்

வரைந்தேன் வார்த்தை வரிகளாக...

அவள் விழிகள் தந்த வினாத்தாளுக்கு

அவள் மனமே விடைத்தாள்

ஆனது என் குற்றமா...?

ஏதோ கிறுக்கி விட்டேன்

என்று சற்றும் யோசிக்காமல்...

என்னை ஏசிச் சென்றாள்...

என் காதலுக்கு அவள்

மதிப்பெண் தான் தருவாளோ...!

இல்லை என் காதலை

மதிக்காத பெண்ணாய் ஆவாளோ...!

எதிர் பார்த்து நிற்கிறேன்...

ஏமாற்றம் தான் தருவாளோ...!

என்னில் மாற்றம்தான் தருவாளோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2016

மின்னல் விழி கொண்டவளா...!

கண்கள் கூசும் மின்னலா...

மின்னல் வீசும் கண்களா...

உன் பார்வை பட்டது என்னிலா...

என் பார்வை போனது உன்னிலா...

உன்னை மட்டும் பார்க்கிறேன்...

என்னை நானே மறக்கிறேன்...

என் கண்கள் மூட மறுக்கிறேன்...

உன்னை கனவில் காண துடிக்கிறேன்...

உறக்கம் இல்லை கண்ணிலே...

உன்னை பார்க்கிறேன் கனவிலே...

நீதான் என்மன வானிலே...

நான் கனவாய் காணும் பெண்ணிலா...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 16 ஏப்ரல், 2016

என்னுடலோ சலனமின்றி...

ஏதோ சொல்ல நினைக்கிறேன்

சொல்ல முடியாமல் தவிக்கிறேன்...

ஏந்திழையின் விழி இரண்டில்

ஏக்கத்தின் கண்ணீர் பார்க்கிறேன்...

ஏதேனும் சொல்ல நானும்

எத்தனமாய் நிற்கிறேன்...

ஏனோ என்னால் முடியாமல்

ஏக்கம் நிறைந்து திகைக்கிறேன்...

என்னவளின் அருகில் நானும்

நின்று கொண்டே அழுகிறேன்...

ஏனோ தெரியவில்லை என்

கண்ணீர் மண்ணில் விழவில்லை...

என்னுடலோ சலனமின்றி

சவமாய் அவளருகில்...

என்னவளின் அழுகையோ என்னருகில்...

என்னுயிரோ தவிக்குதே அவளருகில்...


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்