வியாழன், 9 ஜூன், 2016

துடித்து மலருதடி...

துடித்து மலருதடி...



ன் நாவின் சத்தம் 
கேட்க என் ஆவி
எனக்குள் துடிக்குதடி...
உன் கூந்தல் மயிரில்
அரை நாள் வாழ
என் உயிரும் தினம்
பூ போல மலருதடி...!










-பிரியமில்லாதவன் 


வெள்ளி, 27 மே, 2016

முதலிடம் பிடித்த கவிதை

முதலிடம் பிடித்த கவிதை








ந்தன் கவிதைப் 
புத்தகத்தில் முதலிடம்
பிடித்த கவிதை நீ தானடி...
உன்னுள் ஓர் நொடி
வாழ்ந்திட வேண்டும்...
அந்த நொடியே ஓர் யுகம் 
ஆகிட வேண்டும்...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 24 மே, 2016

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...







விதைகள் வீசும் 
                         கன்னிப் பூவே...
உந்தன் கண்கள் 
                         பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
                         விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
                         ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
                         உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
                         எந்தன் மூச்சில்...






பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 22 மே, 2016

முத்தழகு மழலை

முத்தழகு மழலை


 துளி உதிரம்
                  சிறு துளியாகி...
கருப்பை சென்று...
                  கர்ப்பம் கொண்டு...
மாதங்கள் சில 
                  மூச்சடக்கி பெத்தெடுத்த
முத்தழகு நீயோ...!










பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 20 மே, 2016

ஒளி இழந்த விழிகள்

ஒளி இழந்த விழிகள்...




ளி இழந்த விழிகளுக்கு
பிழைக்க ஒரு வழி இல்லையே
வழியோரம் பாடுகிறோம்
வயிற்றுப் பிணி போக்கிடவே...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 18 மே, 2016

மீண்டும் மூழ்கடிப்பாளா...!

மீண்டும் மூழ்டிப்பாளா...!









வளின் அழகு விழிகள் கண்டு
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்திட்ட நானும் எழுந்திட
நினைத்தும் மூழ்கடித்தாளே...
அவள் காதல் கரம் தந்து
என்னை தூக்கிடுவாளா...!
இல்லை அவளுக்குள்ளே
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மூழ்கிக் கிடந்தும் கதிரவன் கண்ட
தாமரையாய் மலர்ந்திடுவேனா...!
இல்லை அவளின் நிராகரிப்பால்
அவளுள்ளே மட்கிப் போவேனா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத்  துளிகள்

ஞாயிறு, 15 மே, 2016

உள்ளம் கொள்ளை கொண்டவள்...

உள்ளம் கொள்ளை கொண்டவள்...






அவளது வெட்கம் தந்து 
                            எந்தன் உள்ளம் 
கொள்ளை கொண்டாள்...
                            வெள்ளை உள்ளம் 
தந்து கவிதை ஒன்றை 
                            படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை 
                            தேவதையே உன்னை 
இழுத்தணைத்து உதட்டோரம் 
                            ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
                            வெட்கத்தால் கண்களை 
மூடி எந்தன் மார்பில் 
                            முகத்தை புதைத்துக் 
கொண்டவள் அங்கே
                            என் இதயம் சொன்ன 
கவிதைகளை கேட்டிருப்பாளா...!











Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்