வெள்ளி, 14 அக்டோபர், 2016

சோறு போட்ட மண்

சோறு போட்ட மண்




ஞ்சை,புஞ்சை
              என்று விளைந்த
எங்கள் மண்ணின்
              நெஞ்சை பிளந்து
நஞ்சு விதைக்கும் 
              திட்டங்கள் வேண்டாம்.
எம் அரசே...
              சோறு போட்ட மண்ணை
கூறு போடுவதுதான் ஏனோ...!
              மூன்று வேளை சோறு
தின்றும் போட்டாயோ கூறு...!!!



Ajai Sunilkar Joseph







ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வெண்மதி Tailors O/o Ajai Sunilkar Joseph

வெண்மதி Tailors 
O/o Ajai Sunilkar Joseph






அன்பான வலையுலக சொந்தங்களை இந்த 
பதிவில் சந்திப்பதில் பிரியமில்லாதவனுக்கு
சந்தோஷம்தான்....!
ஆனால்.....
                  என்னவோ வலையுலகை விட்டு
ரொம்ப தூரமாக போனதாக உணர்கிறேன்,
அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்....

ஏற்கனவே ஒரு பதிவில்
என்னை பற்றி கொஞ்சம்
சொல்லி இருக்கிறேன்.

அதில் சொன்னபடி எல்லாம் வல்ல 
இறைவன் அருளால் தையல் வேலையை
ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன்.

6-7-2016 ம் தேதி என் வாழ்க்கையில்
நான் உழைத்து பிழைக்கவே இந்த
வெண்மதி எனக்காக உதித்தாள்.
நான் இந்த வெண்மதிக்கு முதலாளி 
ஆகி விட்ட காரணம்தான் வலையுலகை
விட்டு ரொம்ப தூரம் போன காரணம் கூட.

அம்மா,அப்பா ஆசியுடன் தையல் கடையை
ஆரம்பித்தேன் இறைவன் அருளால் 
அருமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடைக்கு தமிழ் பெயர்தான் வேண்டும் 
என்பதாலும்,என்னவள் பெயரரும்
சேர வேண்டும் என்பதாலும் தான்
இந்த வெண்மதியை உதிக்க வைத்தேன்.

இந்தப்பதிவுக்கு இப்போதாவது நேரம்
கிடைத்தது என்பதுதான் சந்தோஷம்.



மன்னிக்கவும் சொந்தமாக நான் தொழில்
துவங்கிய காரணத்தால் உங்கள் தளங்களுக்கு
என்னால் வரமுடியவில்லை என்பதை
வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்...

நான் உழைத்துப்பிழைக்க இந்த வெண்மதி உதித்தது 
மட்டும்தான் சந்தோஷம்.


இதோ என் வாழ்க்கையில் எனக்காக உதித்த வெண்மதி





(அன்பு நண்பர் Killergee என்னை காணவில்லை என்று ரொம்ப தேடினார்
அவருக்காகவே இந்தப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.)


இதோ பிரியமில்லாதவன்







வியாழன், 9 ஜூன், 2016

துடித்து மலருதடி...

துடித்து மலருதடி...



ன் நாவின் சத்தம் 
கேட்க என் ஆவி
எனக்குள் துடிக்குதடி...
உன் கூந்தல் மயிரில்
அரை நாள் வாழ
என் உயிரும் தினம்
பூ போல மலருதடி...!










-பிரியமில்லாதவன் 


வெள்ளி, 27 மே, 2016

முதலிடம் பிடித்த கவிதை

முதலிடம் பிடித்த கவிதை








ந்தன் கவிதைப் 
புத்தகத்தில் முதலிடம்
பிடித்த கவிதை நீ தானடி...
உன்னுள் ஓர் நொடி
வாழ்ந்திட வேண்டும்...
அந்த நொடியே ஓர் யுகம் 
ஆகிட வேண்டும்...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 24 மே, 2016

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...







விதைகள் வீசும் 
                         கன்னிப் பூவே...
உந்தன் கண்கள் 
                         பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
                         விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
                         ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
                         உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
                         எந்தன் மூச்சில்...






பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 22 மே, 2016

முத்தழகு மழலை

முத்தழகு மழலை


 துளி உதிரம்
                  சிறு துளியாகி...
கருப்பை சென்று...
                  கர்ப்பம் கொண்டு...
மாதங்கள் சில 
                  மூச்சடக்கி பெத்தெடுத்த
முத்தழகு நீயோ...!










பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 20 மே, 2016

ஒளி இழந்த விழிகள்

ஒளி இழந்த விழிகள்...




ளி இழந்த விழிகளுக்கு
பிழைக்க ஒரு வழி இல்லையே
வழியோரம் பாடுகிறோம்
வயிற்றுப் பிணி போக்கிடவே...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்