வெள்ளி, 18 நவம்பர், 2016

பிரிவுக்குப் பின் புலம்பல்தானோ...

காற்றே சாட்சி....

வ்வொரு முறையும்
வீசுகின்ற காற்று
என்னைக் கடந்து 
செல்லும்போது...
உன் நினைவுகளையும்,
உன் சுவாசத்தையும்
என்னிடம் கொடுத்து
விட்டுதான் செல்கிறது...
நீ என்னைப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
என்னை விட்டு
யாராலும் பிரிக்க முடியாது
என்பதற்கு காற்றே சாட்சி...


Ajai Sunilkar Joseph


அடங்கிப்போன துடிப்பு....

யிர் நீத்த பறவையாக
உன் உறவை இழந்த
என் இதயத்துடிப்பு
அடங்கிப் போனதடி(டா)...

Ajai Sunilkar Joseph


தொலைத்து விட்டாள்...


ன்னைப் பார்த்த 
முதல் நாளிலே...
என்னை உன்னிடம்
கொடுத்து விட்டேனே...
நான் உனக்கு
கொடுத்த என்னை
நீ தொலைத்தாயோ...!
உன்னிடம் பலமுறைத்
தேடிப் பார்த்தும் என்னைக் 
காணவில்லையே...!


Ajai Sunilkar Joseph



கிறுக்கனின் வலிகள்(வரிகள்)....


நீ எனக்கு கொடுத்த
வலிகளை தினம் தினம்
வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் காகிதத்தில்...
இந்த கிறுக்கனின் 
வரிகளும் , வலிகளும்
என்றாவது ஓர் நாள்
உனக்கு புரியும் என்று...


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 16 நவம்பர், 2016

கிடைத்தாள் புதிய தோழி....

கிடைத்தாள் புதிய தோழி....



லைப்பேசியின் 
அலைரிசையில்
அகம் பகிர்ந்த 
முகம் தெரியாத
ஓர் உண்மையான
உறவுதான் நீ...
உன்னை எனக்கு 
தோழியாய் கொடுத்த
இறைவனுக்கு நன்றி...!!!


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவன் 


ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பூவே....

பெண் பூவே....



ண்டின் இரைச்சல் கேட்டு
புன்னகைக்க மறுத்தாயோ
என் ( பெண் ) பூவே...!
நீ புன்னகைக்க மறுத்ததால்
என் இதயப் பூந்தோட்டம்
வாடி மாண்டதை அறிவாயா...?
பெண் பூவே...!
உன் புன்னகை பார்க்க பூங்காற்றாய் 
உன்னை வருட வந்தேனடி...
புரிந்து கொண்ட நீயோ என்னை
முட்களாலே நெருடிச் சென்றாயடி...


Ajai Sunilkar Joseph






பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்...





சனி, 12 நவம்பர், 2016

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...


ண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...



Ajai Sunilkar Joseph



பிரியமில்லாதவன்

வெள்ளி, 11 நவம்பர், 2016

அவள் வரவை எதிர்நோக்கி...

அவள் வரவை எதிர்நோக்கி...





வீசும் காற்றாய் வந்து
என் மூச்சாய் கலந்து
என்னிதயம் சேர்ந்தவளே...!
எங்கேதான் இருந்தாயோ...!
எனக்கெனதான் பிறந்தாயோ...!
நீ விட்டுச் சென்ற உந்தன்
சுவாசம் என்னுள் வந்து 
உன்னை எனக்கானவள் என்று 
உணர்த்துவது மெய்யா...? பொய்யா...?
புரியாத நானும் உன் வரவை 
எதிர்நோக்கி காத்திருக்கிறேன் 
அறிவாயா...?

பிரியமில்லாதவன் 
Ajai Sunilkar Joseph






 பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்



வெள்ளி, 14 அக்டோபர், 2016

சோறு போட்ட மண்

சோறு போட்ட மண்




ஞ்சை,புஞ்சை
              என்று விளைந்த
எங்கள் மண்ணின்
              நெஞ்சை பிளந்து
நஞ்சு விதைக்கும் 
              திட்டங்கள் வேண்டாம்.
எம் அரசே...
              சோறு போட்ட மண்ணை
கூறு போடுவதுதான் ஏனோ...!
              மூன்று வேளை சோறு
தின்றும் போட்டாயோ கூறு...!!!



Ajai Sunilkar Joseph







ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வெண்மதி Tailors O/o Ajai Sunilkar Joseph

வெண்மதி Tailors 
O/o Ajai Sunilkar Joseph






அன்பான வலையுலக சொந்தங்களை இந்த 
பதிவில் சந்திப்பதில் பிரியமில்லாதவனுக்கு
சந்தோஷம்தான்....!
ஆனால்.....
                  என்னவோ வலையுலகை விட்டு
ரொம்ப தூரமாக போனதாக உணர்கிறேன்,
அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்....

ஏற்கனவே ஒரு பதிவில்
என்னை பற்றி கொஞ்சம்
சொல்லி இருக்கிறேன்.

அதில் சொன்னபடி எல்லாம் வல்ல 
இறைவன் அருளால் தையல் வேலையை
ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன்.

6-7-2016 ம் தேதி என் வாழ்க்கையில்
நான் உழைத்து பிழைக்கவே இந்த
வெண்மதி எனக்காக உதித்தாள்.
நான் இந்த வெண்மதிக்கு முதலாளி 
ஆகி விட்ட காரணம்தான் வலையுலகை
விட்டு ரொம்ப தூரம் போன காரணம் கூட.

அம்மா,அப்பா ஆசியுடன் தையல் கடையை
ஆரம்பித்தேன் இறைவன் அருளால் 
அருமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடைக்கு தமிழ் பெயர்தான் வேண்டும் 
என்பதாலும்,என்னவள் பெயரரும்
சேர வேண்டும் என்பதாலும் தான்
இந்த வெண்மதியை உதிக்க வைத்தேன்.

இந்தப்பதிவுக்கு இப்போதாவது நேரம்
கிடைத்தது என்பதுதான் சந்தோஷம்.



மன்னிக்கவும் சொந்தமாக நான் தொழில்
துவங்கிய காரணத்தால் உங்கள் தளங்களுக்கு
என்னால் வரமுடியவில்லை என்பதை
வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்...

நான் உழைத்துப்பிழைக்க இந்த வெண்மதி உதித்தது 
மட்டும்தான் சந்தோஷம்.


இதோ என் வாழ்க்கையில் எனக்காக உதித்த வெண்மதி





(அன்பு நண்பர் Killergee என்னை காணவில்லை என்று ரொம்ப தேடினார்
அவருக்காகவே இந்தப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.)


இதோ பிரியமில்லாதவன்