லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
வெள்ளி, 30 டிசம்பர், 2016
வார்த்தைக் கத்தி....
வியாழன், 29 டிசம்பர், 2016
பொய்யான நிலா...
பொய்யான நிலா...
காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து
அவள் மன வானில்...
காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து
அவள் மன வானில்...
By....Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
புதன், 28 டிசம்பர், 2016
என் தவம்....
வெள்ளி, 18 நவம்பர், 2016
பிரிவுக்குப் பின் புலம்பல்தானோ...
காற்றே சாட்சி....
ஒவ்வொரு முறையும்
வீசுகின்ற காற்று
என்னைக் கடந்து
செல்லும்போது...
உன் நினைவுகளையும்,
உன் சுவாசத்தையும்
என்னிடம் கொடுத்து
விட்டுதான் செல்கிறது...
நீ என்னைப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
என்னை விட்டு
யாராலும் பிரிக்க முடியாது
என்பதற்கு காற்றே சாட்சி...
ஒவ்வொரு முறையும்
வீசுகின்ற காற்று
என்னைக் கடந்து
செல்லும்போது...
உன் நினைவுகளையும்,
உன் சுவாசத்தையும்
என்னிடம் கொடுத்து
விட்டுதான் செல்கிறது...
நீ என்னைப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
என்னை விட்டு
யாராலும் பிரிக்க முடியாது
என்பதற்கு காற்றே சாட்சி...
Ajai Sunilkar Joseph
அடங்கிப்போன துடிப்பு....
உயிர் நீத்த பறவையாக
உன் உறவை இழந்த
என் இதயத்துடிப்பு
அடங்கிப் போனதடி(டா)...
Ajai Sunilkar Joseph
தொலைத்து விட்டாள்...
உன்னைப் பார்த்த
முதல் நாளிலே...
என்னை உன்னிடம்
கொடுத்து விட்டேனே...
நான் உனக்கு
கொடுத்த என்னை
நீ தொலைத்தாயோ...!
உன்னிடம் பலமுறைத்
தேடிப் பார்த்தும் என்னைக்
காணவில்லையே...!
Ajai Sunilkar Joseph
கிறுக்கனின் வலிகள்(வரிகள்)....
நீ எனக்கு கொடுத்த
வலிகளை தினம் தினம்
வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் காகிதத்தில்...
இந்த கிறுக்கனின்
வரிகளும் , வலிகளும்
என்றாவது ஓர் நாள்
உனக்கு புரியும் என்று...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
புதன், 16 நவம்பர், 2016
கிடைத்தாள் புதிய தோழி....
ஞாயிறு, 13 நவம்பர், 2016
பெண் பூவே....
பெண் பூவே....
வண்டின் இரைச்சல் கேட்டு
புன்னகைக்க மறுத்தாயோ
என் ( பெண் ) பூவே...!
நீ புன்னகைக்க மறுத்ததால்
என் இதயப் பூந்தோட்டம்
வாடி மாண்டதை அறிவாயா...?
பெண் பூவே...!
உன் புன்னகை பார்க்க பூங்காற்றாய்
உன்னை வருட வந்தேனடி...
புரிந்து கொண்ட நீயோ என்னை
முட்களாலே நெருடிச் சென்றாயடி...
வண்டின் இரைச்சல் கேட்டு
புன்னகைக்க மறுத்தாயோ
என் ( பெண் ) பூவே...!
நீ புன்னகைக்க மறுத்ததால்
என் இதயப் பூந்தோட்டம்
வாடி மாண்டதை அறிவாயா...?
பெண் பூவே...!
உன் புன்னகை பார்க்க பூங்காற்றாய்
உன்னை வருட வந்தேனடி...
புரிந்து கொண்ட நீயோ என்னை
முட்களாலே நெருடிச் சென்றாயடி...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்...
சனி, 12 நவம்பர், 2016
எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...
எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...
கண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...
கண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









