வெள்ளி, 30 டிசம்பர், 2016

வார்த்தைக் கத்தி....

வார்த்தைக் கத்தி....

நான் பேசிய 
வார்த்தைகளே
என்னை கத்தி போல்
கிழிக்கிறது...
அதைக் கேட்டவள்
எப்படி தாங்கியிருப்பாள்
என்று நான் 
உணர்ந்தேன் இன்று...
அதனால்தான் என்னமோ 
இதயம் வலிக்கிறதோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

வியாழன், 29 டிசம்பர், 2016

பொய்யான நிலா...

பொய்யான நிலா...



காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து 
அவள் மன வானில்...
By....Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 28 டிசம்பர், 2016

என் தவம்....

என் தவம்....

யாருக்கு நீ வரமாக 
கிடைக்கப் போகிறாயோ 
எனக்குத் தெரியவில்லை,
நீ எனக்கு கிடைத்தால்
என்னை விட அதிக தவம் 
செய்தவர் யாருமில்லை...
By....Ajai Sunilkar Joseph




கரையோரம் சிந்திய கவிதைகள்



வெள்ளி, 18 நவம்பர், 2016

பிரிவுக்குப் பின் புலம்பல்தானோ...

காற்றே சாட்சி....

வ்வொரு முறையும்
வீசுகின்ற காற்று
என்னைக் கடந்து 
செல்லும்போது...
உன் நினைவுகளையும்,
உன் சுவாசத்தையும்
என்னிடம் கொடுத்து
விட்டுதான் செல்கிறது...
நீ என்னைப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
என்னை விட்டு
யாராலும் பிரிக்க முடியாது
என்பதற்கு காற்றே சாட்சி...


Ajai Sunilkar Joseph


அடங்கிப்போன துடிப்பு....

யிர் நீத்த பறவையாக
உன் உறவை இழந்த
என் இதயத்துடிப்பு
அடங்கிப் போனதடி(டா)...

Ajai Sunilkar Joseph


தொலைத்து விட்டாள்...


ன்னைப் பார்த்த 
முதல் நாளிலே...
என்னை உன்னிடம்
கொடுத்து விட்டேனே...
நான் உனக்கு
கொடுத்த என்னை
நீ தொலைத்தாயோ...!
உன்னிடம் பலமுறைத்
தேடிப் பார்த்தும் என்னைக் 
காணவில்லையே...!


Ajai Sunilkar Joseph



கிறுக்கனின் வலிகள்(வரிகள்)....


நீ எனக்கு கொடுத்த
வலிகளை தினம் தினம்
வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் காகிதத்தில்...
இந்த கிறுக்கனின் 
வரிகளும் , வலிகளும்
என்றாவது ஓர் நாள்
உனக்கு புரியும் என்று...


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 16 நவம்பர், 2016

கிடைத்தாள் புதிய தோழி....

கிடைத்தாள் புதிய தோழி....



லைப்பேசியின் 
அலைரிசையில்
அகம் பகிர்ந்த 
முகம் தெரியாத
ஓர் உண்மையான
உறவுதான் நீ...
உன்னை எனக்கு 
தோழியாய் கொடுத்த
இறைவனுக்கு நன்றி...!!!


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவன் 


ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பூவே....

பெண் பூவே....



ண்டின் இரைச்சல் கேட்டு
புன்னகைக்க மறுத்தாயோ
என் ( பெண் ) பூவே...!
நீ புன்னகைக்க மறுத்ததால்
என் இதயப் பூந்தோட்டம்
வாடி மாண்டதை அறிவாயா...?
பெண் பூவே...!
உன் புன்னகை பார்க்க பூங்காற்றாய் 
உன்னை வருட வந்தேனடி...
புரிந்து கொண்ட நீயோ என்னை
முட்களாலே நெருடிச் சென்றாயடி...


Ajai Sunilkar Joseph






பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்...





சனி, 12 நவம்பர், 2016

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...


ண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...



Ajai Sunilkar Joseph



பிரியமில்லாதவன்