வியாழன், 12 ஜனவரி, 2017

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...


வள் வந்த நேரம்,
இதயத்தின் ஓரம்,
துடிப்புகளின் வீரம்,
உள்ளுக்குள் பாரம்,
தந்தே போனாள் தூரம்,
பின்னர்...
                விழிகளின் ஓரம்,
இதயத்தின் ஈரம்,
காதலால் நொந்து,
கண்ணீராய் வந்து,
கன்னங்கள் குளிர்ந்து,
மண் மீது உதிர்ந்ததோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள் 


புதன், 11 ஜனவரி, 2017

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...


பொய் : 1


ன் பிரிவால் 
எனக்குத் துயரமில்லை,
பிரிந்தாலும் நீ
எனக்குத் தூரமில்லை,
சேர்க்கப்படாத நம்
காதல் பிரிக்கப்பட்டதால்,
என் நெஞ்சுக்குள்
ஒன்றும் பாரமில்லை...


By...Ajai Sunilkar Joseph



(பொய்கள் தொடரும்...)

கரையோரம் சிதறிய கவிதைகள் 

செவ்வாய், 10 ஜனவரி, 2017

பறிக்கப்பட்ட உரிமைகள்...

பறிக்கப்பட்ட உரிமைகள்...


கொடுக்கப்பட்ட உரிமைகள்
பறிக்கப்பட்ட போது மனதில்
வந்த வலிகள் என்னை
ரணங்களாய் கொன்று புதைக்கிறது...
இருந்தாலும்...
                       என்ன செய்வது உயிரே
வலிக்கேதும் உருவங்கள் 
கிடையாது அல்லவா...!
உருவமேதும் இருந்திருந்தால்
அதை நானே வென்றிருப்பேனே...!


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

திங்கள், 9 ஜனவரி, 2017

அனுமதி இல்லை போல...

அனுமதி இல்லை போல...



தேவதை (அவள்)
வாழும் இடத்தில்,
மனிதனாய் (நான்)வாழ
அனுமதி இல்லையென
தேவதையவளின்
பிரிவுக்கு பின்னே
புரிந்து கொண்டேன்...

By...Ajai Sunilkar Joseph





கரையோரம் சிதறிய கவிதைகள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

வண்ணம் இழந்த வானவில்...

வண்ணம் இழந்த வானவில்...


ண்ணங்கள் இழந்த
வானவில்லாய் அவள்...
ஓவியனாய் மாறி
ஒவ்வொரு நாளும்
வண்ணங்கள் தீட்டி,
என் காதல் தூரிகையால்
வருடி வந்தேனே...
ஏனோ அவள் கண்ணீரால்
அதை கரைத்தே விடுகிறாள்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 7 ஜனவரி, 2017

நீ என்றால் பிடிக்கும்...

நீ என்றால் பிடிக்கும்...


ண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

மறக்க முடியாமல் மரத்த இதயம்....

மறக்க முடியாமல் மரத்த இதயம்....


லிகளை மறக்க,
விழிகளை மூடி,
வழிகளை தேடினேன்...
மௌன மொழிகள்
பேசும் தேசம் சென்று,
கொஞ்சமாக கதறி,
கரையோரம் சிதற
விட்டேன் கவிதைகளை...
அந்த நொடிப்பொழுதே 
வலிகள் மறைந்தது,
வலிகள் தாங்கிய 
இதயமும் மரத்தது...

By....Ajai sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்