லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
புதன், 10 மே, 2017
போதும் இந்தப் பிறவி...
புதன், 19 ஏப்ரல், 2017
உன் நினைவை காவல் காப்பேனே...!
உன் நினைவை காவல் காப்பேனே...!
கண்ணில் கண்ட
காட்சியெல்லாம்
கண்மணியே நீதானே...
உன்னை நினைத்து
நெஞ்சம் நெகிழும்
நேரமும் இதுதானே...!
நீ மரித்தாலும் மறைந்தாலும்
என்னை விட்டு பிரிந்தாலும்...
மண்ணோடு புதைந்தாலும்...
நெஞ்சில் புதையாமல் இருப்பாயே...!
புதைந்தாலும் புதையல்
காக்கும் பூதம் போல்...
உந்தன் நினைவை
காவல் காப்பேனே...!
கண்ணில் கண்ட
காட்சியெல்லாம்
கண்மணியே நீதானே...
உன்னை நினைத்து
நெஞ்சம் நெகிழும்
நேரமும் இதுதானே...!
நீ மரித்தாலும் மறைந்தாலும்
என்னை விட்டு பிரிந்தாலும்...
மண்ணோடு புதைந்தாலும்...
நெஞ்சில் புதையாமல் இருப்பாயே...!
புதைந்தாலும் புதையல்
காக்கும் பூதம் போல்...
உந்தன் நினைவை
காவல் காப்பேனே...!
By...Ajai Sunilkar Joseph
காணொளி
வெள்ளி, 7 ஏப்ரல், 2017
கரையோரம் சிதறிய கவிதைகள்
கரையோரம் சிதறிய கவிதைகள்
அவள் என்னைக்
கண்டெடுத்த நாள் முதலாய்
நான் தொலைந்தே தான்
போனேனோ...!!!
அன்று முதல் அவளின்
அவனாய் அவள் இதயம்
சென்று என்னை நானே
தேடிப் பார்க்கிறேன்,
எந்தன் கண்களில்
சொட்டும் கண்ணீரால்,
கன்னம் நனைக்கும் செந்நீரால்
அவளை மட்டும் உணர்கிறேன்...
என்னுயிர்த்துளி வீழ்ந்து
சிப்பிக்குள் மூத்தாற் போல்
என் இதயத்தின் சொத்தாய்
உள்ளுக்குள் உறைந்தாளே...!
எங்கே நான் போனாலும்
அங்கேயும் வருவாளே,
கொஞ்சும் நினைவெல்லாம்
நெஞ்சோடு தந்தாளே...!
காயம் தந்தவள் எங்கோ
போய் என்னுள்ளே
என்னென்ன மாயம்
செய்தே போனாளோ...!
கண்ணோடு நான் கண்ட
கனவெல்லாம் தினமும்
மண்ணோட மண்ணாய்
புதைத்தே போனாளே...!
என் நெஞ்சில் அடியெடுத்து
படையெடுத்த ஆசை
எல்லாம் அரை நொடிக்குள்
அறுத்தேதான் எடுத்தாளே...!
சிறகறுத்த பறவை போல்
அவளின் உறவறுத்துப்
போனவள் எந்தன் காதலின்
கருவறுத்துப் போனாளே...!
துண்டிக்கப்பட்ட உயிர்
போல் என்னைத் துடித்
துடிக்க செய்து இதயத்தை
வேரறுத்துப் போனாளே...!
அவளுக்காய் துடித்த
உயிரொன்று என்னுள்
ஓயுமுன் என்னை கொதி
நீரில் தூக்கிப் போட்டாளே...
அவள் தந்த வலிகளை
கரையோரம் சிதறுகிறேன்...
வலியறிந்து வருவாளா
வலி மறக்கச் செய்வாளா...!
இத்தனை வலிகள் தந்தும்
அத்தனை காதல் சேர்த்து
மீண்டும் காத்திருக்கிறேன்
கண்மணியவள் அறிவாளா...?
அவள் வந்தாலே போதும்
வலிகள் அறிய வேண்டாம்...
வலி தாங்காத அவள் இதயம்
அதையறிந்தால் தூங்காதல்லவா...?
அவள் என்னைக்
கண்டெடுத்த நாள் முதலாய்
நான் தொலைந்தே தான்
போனேனோ...!!!
அன்று முதல் அவளின்
அவனாய் அவள் இதயம்
சென்று என்னை நானே
தேடிப் பார்க்கிறேன்,
எந்தன் கண்களில்
சொட்டும் கண்ணீரால்,
கன்னம் நனைக்கும் செந்நீரால்
அவளை மட்டும் உணர்கிறேன்...
என்னுயிர்த்துளி வீழ்ந்து
சிப்பிக்குள் மூத்தாற் போல்
என் இதயத்தின் சொத்தாய்
உள்ளுக்குள் உறைந்தாளே...!
எங்கே நான் போனாலும்
அங்கேயும் வருவாளே,
கொஞ்சும் நினைவெல்லாம்
நெஞ்சோடு தந்தாளே...!
காயம் தந்தவள் எங்கோ
போய் என்னுள்ளே
என்னென்ன மாயம்
செய்தே போனாளோ...!
கண்ணோடு நான் கண்ட
கனவெல்லாம் தினமும்
மண்ணோட மண்ணாய்
புதைத்தே போனாளே...!
என் நெஞ்சில் அடியெடுத்து
படையெடுத்த ஆசை
எல்லாம் அரை நொடிக்குள்
அறுத்தேதான் எடுத்தாளே...!
சிறகறுத்த பறவை போல்
அவளின் உறவறுத்துப்
போனவள் எந்தன் காதலின்
கருவறுத்துப் போனாளே...!
துண்டிக்கப்பட்ட உயிர்
போல் என்னைத் துடித்
துடிக்க செய்து இதயத்தை
வேரறுத்துப் போனாளே...!
அவளுக்காய் துடித்த
உயிரொன்று என்னுள்
ஓயுமுன் என்னை கொதி
நீரில் தூக்கிப் போட்டாளே...
அவள் தந்த வலிகளை
கரையோரம் சிதறுகிறேன்...
வலியறிந்து வருவாளா
வலி மறக்கச் செய்வாளா...!
இத்தனை வலிகள் தந்தும்
அத்தனை காதல் சேர்த்து
மீண்டும் காத்திருக்கிறேன்
கண்மணியவள் அறிவாளா...?
அவள் வந்தாலே போதும்
வலிகள் அறிய வேண்டாம்...
வலி தாங்காத அவள் இதயம்
அதையறிந்தால் தூங்காதல்லவா...?
By...Ajai Sunilkar Joseph
காணொளி
வியாழன், 6 ஏப்ரல், 2017
மனதில் நினைப்பாளா...?
திங்கள், 27 மார்ச், 2017
உன் மடியே போதுமடி...
உன் மடியே போதுமடி...
உன்னோடான பொழுதெல்லாம்
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...
உன்னோடான பொழுதெல்லாம்
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
சனி, 25 மார்ச், 2017
குற்றமெனில் தண்டித்துவிடு...
திங்கள், 20 மார்ச், 2017
தவத்தின் பலன் பொய்யூர்...
தவத்தின் பலன் பொய்யூர்...
பத்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...
பத்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











