ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

கன்னக்குழியில் வீழ்த்தி யுத்தமொன்று செய்கிறாள்...

கன்னக்குழியில் வீழ்த்தி 
யுத்தமொன்று செய்கிறாள்...


பெண்ணொருத்திக் கண்டு,
அவளின் விழிகள் கண்டு,
சிரிக்கும் கன்னம் இரண்டு,
அதிலே குழிகள் கண்டு,
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்து விட்ட நானும்,
எழுந்து விட நினைத்தும்,
மங்கை மனதில் மயங்கி,
கன்னியின் காதலில் மடிந்தேன்...
அவளோ காதல் தந்தாள்,
என் இதயம் இதமாய் துடிக்க,
அவள் நினைவோ என்னை ஆள,
கட்டி விட்டேன் காதல் கோட்டை...
கட்டிவிட்ட காதல் கோட்டையில்...
என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து...
என் இரத்த நாளங்கள் முழுவதும் சென்று...
அகிம்சையாய் இம்சை செய்கிறாள்...
முத்தங்கள் தந்து யுத்தங்கள் செய்கிறாள் 
என் இதயத்தின் ராணியவள்...
அவளிடம் தோற்கிறேன் யுத்தத்தில்...
அவளுக்காக வாழ்கிறேன் மொத்தத்தில்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி



திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...


னதில் நினைத்தவளை
மனதோடு புதைத்து விட்டேன்,
மனமோ படபடக்க , மனதில் கனவோடு,
மங்கையவள் நினைவோடு,
மரணத்தை தழுவி , மண்மீது உதிர்ந்தேனே...!
தேவதையவள் வாழும் இடத்தில்,
மனிதனாய் நான் வாழ அனுமதி 
இல்லையென புரிந்து கொண்டேன்...
தேவதையவளின் பிரிவுக்கு பின்னே...
இறுதிவரை உறுதி செய்யாத காதலுடன்
அவள் நினைவாய் தொடர்கின்றேன்
என் காதல் பயணத்தை...
வழிதனில் கன்னியாய் வருவாளா...?
விழிதனில் கண்ணீராய் வருவாளா...?
புரியாத நானும் பரிவாக நிற்கின்றேன்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி






வெள்ளி, 2 ஜூன், 2017

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...


னம் விரும்புவதோ
மரணத்தை மட்டுமே...!
உன் நினைவுகள்தான்
என்னமோ அதைத் 
தள்ளிப்போடுகின்றன...
என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முடிவு செய்த பின்பும்
கமா போட்டு தொடர 
வைக்கிறாய் ஏனடி...?


By...Ajai Sunilkar Joseph




வியாழன், 1 ஜூன், 2017

பிறவிப்பலனை அடைவேனடி...

பிறவிப்பலனை அடைவேனடி...


நெஞ்சத்தில் மஞ்சம் வைத்து
கொஞ்சமாய் கொஞ்சி சென்று 
என்னிதயத்தை மிஞ்ச வைத்து,
அதிலே எஞ்சி நின்ற என் 
இதயக் காதலின் வஞ்சி மலரே...
அதில் நீதானடி என்னுயிரே...
நானே உனக்குத் தாலிகட்டி
உன் நெஞ்சில் ஆட வைத்து,
என் நெஞ்சை மஞ்சமாக்கி
உன்னைக் கொஞ்சி உறங்க 
வைத்தால் என் பிறவிப்பலனை
அடைந்தே விடுவேனடி...
என் காதல் கண்ணம்மா...

By...Ajai Sunilkar Joseph




புதன், 10 மே, 2017

போதும் இந்தப் பிறவி...

போதும் இந்தப் பிறவி...


நீ என்னை விலகிட 
நினைக்கும்போதெல்லாம்...
அடிக்கடி இறந்து விடுகிறேன்,
அதனால் தான் என்னமோ
வாழ்ந்தும் முடித்து விட்டேன்,
உன்னோடு உன் அன்பில்..
போதும் இந்தப் பிறவி,
இன்னொரு ஜென்மம் இருந்தால்,
அதிலொரு பிறவி வேண்டும்,
உணர்வுகளே இல்லாத கல்லாக....


By...Ajai Sunilkar Joseph



காணொளி



புதன், 19 ஏப்ரல், 2017

உன் நினைவை காவல் காப்பேனே...!

உன் நினைவை காவல் காப்பேனே...!


ண்ணில் கண்ட 
                  காட்சியெல்லாம்
கண்மணியே நீதானே...
                  உன்னை நினைத்து
நெஞ்சம் நெகிழும்
                  நேரமும் இதுதானே...!
நீ மரித்தாலும் மறைந்தாலும்
                  என்னை விட்டு பிரிந்தாலும்...
மண்ணோடு புதைந்தாலும்...
                  நெஞ்சில் புதையாமல் இருப்பாயே...!
புதைந்தாலும் புதையல்
                  காக்கும் பூதம் போல்...
உந்தன் நினைவை
                  காவல் காப்பேனே...!

By...Ajai Sunilkar Joseph 



காணொளி




வெள்ளி, 7 ஏப்ரல், 2017

கரையோரம் சிதறிய கவிதைகள்

கரையோரம் சிதறிய கவிதைகள்

அவள் என்னைக்
கண்டெடுத்த நாள் முதலாய்
நான் தொலைந்தே தான்
போனேனோ...!!!

அன்று முதல் அவளின்
அவனாய் அவள் இதயம்
சென்று என்னை நானே
தேடிப் பார்க்கிறேன்,

எந்தன் கண்களில்
சொட்டும் கண்ணீரால்,
கன்னம் நனைக்கும் செந்நீரால்
அவளை மட்டும் உணர்கிறேன்...

என்னுயிர்த்துளி வீழ்ந்து
சிப்பிக்குள் மூத்தாற் போல்
என் இதயத்தின் சொத்தாய்
உள்ளுக்குள் உறைந்தாளே...!

எங்கே நான் போனாலும்
அங்கேயும் வருவாளே,
கொஞ்சும் நினைவெல்லாம்
நெஞ்சோடு தந்தாளே...!

காயம் தந்தவள் எங்கோ
போய் என்னுள்ளே
என்னென்ன மாயம்
செய்தே போனாளோ...!

கண்ணோடு நான் கண்ட
கனவெல்லாம் தினமும்
மண்ணோட மண்ணாய்
புதைத்தே போனாளே...!

என் நெஞ்சில் அடியெடுத்து
படையெடுத்த ஆசை
எல்லாம் அரை நொடிக்குள்
அறுத்தேதான் எடுத்தாளே...!

சிறகறுத்த பறவை போல்
அவளின் உறவறுத்துப்
போனவள் எந்தன் காதலின்
கருவறுத்துப் போனாளே...!

துண்டிக்கப்பட்ட உயிர்
போல் என்னைத் துடித்
துடிக்க செய்து இதயத்தை
வேரறுத்துப் போனாளே...!

அவளுக்காய் துடித்த
உயிரொன்று என்னுள்
ஓயுமுன் என்னை கொதி
நீரில் தூக்கிப் போட்டாளே...

அவள் தந்த வலிகளை
கரையோரம் சிதறுகிறேன்...
வலியறிந்து வருவாளா
வலி மறக்கச் செய்வாளா...!

இத்தனை வலிகள் தந்தும்
அத்தனை காதல் சேர்த்து
மீண்டும் காத்திருக்கிறேன்
கண்மணியவள் அறிவாளா...?

அவள் வந்தாலே போதும்
வலிகள் அறிய வேண்டாம்...
வலி தாங்காத அவள் இதயம்
அதையறிந்தால் தூங்காதல்லவா...?


By...Ajai Sunilkar Joseph




காணொளி