வியாழன், 27 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

உன் நினைவுகள்



ள்ளிரவில் விழித்தெழுந்தேன்,

காரணம்...

                 உன் நினைவுகள்

என்னை ரணங்களாய்

கொல்வது போல உணர்வுகள்...

என் தூக்கம் தொலைத்து

புரண்டு புரண்டு படுத்தும்

என் தூக்கத்தை காணேன்,

தேடிப் பார்க்கிறேன் உன்னை,

கண்ணில் சிக்காமல் நழுவி

விடுகிறாய் ஒவ்வொரு கணங்களும்,

மண்ணில் ஏன் பிறந்தேன்

என்றுத் தோன்றுகையில்,

எனக்குள் வேரூன்றுகிறாய்,

நினைவின் விருட்சமாய்

வளர்ந்தும் விட்டாய் பெண்ணே,

உன்னை நிஜத்தில் காணவே

இமை வாசலைத் திறந்து

காத்திருக்கிறேன்,வந்து

இதயத்தில் நுழைந்து விட்டு

இமைகளை மெதுவாக மூடி விடு.

Ajai Sunilkar Joseph 









ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

என்னவென்று  நானெழுத  உனக்காக  வரிகளை...?

என்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...?



ன்னவென்று
நானெழுத
உனக்காக
வரிகளை...?

ஏதோ எழுத நினைக்கிறேன்
இருந்தும் மறந்து விடுகிறேன்,
ஏன்தான் என்று புரியவில்லை...!

இதயம் எழுதத்தூண்டுகிறது,
கைகள் எழுத மறுக்கிறது,
கைகள் எழுத நினைக்கிறது
ஆனால் இதயமோ உன்னை
சிந்திக்க மறுக்கிறது,

ஒன்று நினைக்க,
ஒன்று மறுக்க
உனக்கும் எனக்குமென
இடைவெளி மட்டும் நீண்டு
கொண்டே இருக்கிறது...

காரணம்தான்
என்னவென்று
விளங்கவில்லை,

என்னை நானே விசாரணைக்
கைதியாக்கி விசாரித்துப்பார்க்கிறேன்,
இவ்வழக்கின் தீர்ப்பொன்றும்
எனக்குக் கிடைக்கவில்லை,

இப்படி இருந்தால்
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

கனவுகளுக்குள்ளே
தத்தளிக்கிறேன்
பெண்ணே...
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

என்னோடு முடக்கிவைத்த
உன் ஞாபகங்களை
எடுத்துச்சென்ற பிறகு
நான் எரிக்கட்டையாய்
போன விறகு,

இதையறிந்த பின்னும்
எப்படிக் கேட்கிறாய்
உனக்கான வரிகளை...?

நெஞ்சில் கொள்ளி வைத்து விட்டு
வஞ்சி உன்னால் எஞ்சிய வலிகளை
மட்டும் கொஞ்சி விளையாடுகிறது
என்னுள் இருக்கும் இதயம்,

வலிகளை எனக்கு வரமாக்கி
விட்டு வார்த்தைகளை
சாபமாக்கிப் போன பிறகு
என்னவென்று நானெழுத
உனக்கான வரிகளை...?

Ajai Sunilkar Joseph 




வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பைத்தியக்காரன்...

பைத்தியக்காரன்...


காற்றில் அசையும்போது

திசைகள் தேடும் பறவையாய்

உன்னைத் தேடுகிறேன்,

திரும்பிய திசையெல்லாம்

விரும்பிய உன் பிம்பம்

மட்டுமே காண்கிறேன்,

உன்னையே பிரதிபலிக்கச்

செய்யும் உன் ஞாபகக்

கண்ணாடிகளை அதிகம்

பார்த்து பாதிக்கப்பட்டுவிட்டேன்...

உன் உறவிழந்த பின்னால்

பெண்ணே...!

சிறகிழந்த பறவையானேன்,

நான் அழுதிடும் வலிகளை

எழுதிடும் வரிகளால் உனக்குத்

தொடுத்துப்போகிறேன்

கவிதை மாலையாக,

புரிவதும் பிரிவதும் உன்

உரிமை என்ற பின் உனக்கு

என் காதலை புரியவைக்க

முயற்சிக்கும் நான் உண்மையிலேயே

பைத்தியக்காரன்தான்...

Ajai Sunilkar Joseph


காணெளி



By...
-A



புதன், 29 ஆகஸ்ட், 2018

இறைவனுக்கு நன்றி...!

இறைவனுக்கு நன்றி...!



நாம ஒண்ணு நெனச்சா  கடவுளும் விதியும்  இன்னொண்ணு நெனைக்கிறாங்க...!
என்ன வாழ்கைடானு நினைக்கிறதா இல்லை இதான் வாழ்க்கைனு நெனைக்கிறதா
ஒண்ணுமே வெளங்கல,சரி கஷ்டம் வரும்போது கூடவே  புலம்பலும் மனிதனுக்கு 
வருவது இயல்புதானே?அதான் இந்த புலம்பல்,இரண்டடி நடந்தால் நாலடி பின்னுக்கு 
இழுக்குதுங்க இந்த விதி,வரும் கஷ்டத்த வராதேனு சொன்னாலும் அது கேட்கிற மாதிரி தெரியல, அதான் கொஞ்சம் இஷ்டப்பட்டு வரவேற்கிறேன்...!


பெரிய கஷ்டம் ஒண்ணும் இல்லைங்க, 16/8/2018 அன்று என்  சகோதரனுக்கு ஒரு விபத்து 
நடந்ததுங்க! அதான் இந்த புலம்பலே,பாதத்தை தூக்க உதவும் நரம்புகள் அனைத்தும் 
விபத்தில் துண்டிக்கப்பட்டது , பிறகு மருத்துவ மனையில் அனுமதித்து இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து 24/8/2018 அன்று வீட்டுக்கும் வர சொல்லிட்டாங்க. என்னதான் மனச
தேத்திட்டு ஆறுதல் சொன்னாலும் வலி வலிதானே...!

விபத்து அன்றிலிருந்து சரியாக வேலை செய்ய முடியல,பதிவிட முடியல, மருத்துவமனையில் 
சகோதரன் கூட மூன்று தினங்களே தங்கியிருந்தேன்.சரி அவனை என் அப்பாதான் கூட 
இருந்து கவனித்துக்கொண்டார்,பாவம் அவர் விதிய பாருங்களேன் அவரை நாங்கள் 
பார்த்துக் கொள்ளும் வயதில் எங்களை பார்த்துக் கொள்கிறார்.கடவுள் போல கவனிக்கிறார்,

இந்நேரம் இறைவனுக்கு நன்றி சொல்லியே ஆகணும் இப்படியொரு தந்தையை தந்தமைக்கு.



ஏதோ ஓரு பயணம்,

அதில் எத்தனையோ 

ஏற்ற இறக்கங்கள்,

கற்களும்,முட்களும் மிதித்து 

துவண்டு போகாத ஓர்

உள்ளத்தின் கால்கள்,

வேர்த்து வெலவெலத்துப் போன

தேகத்தின் மூச்சிரைச்சல்,

முடங்கிப் போய்டுவேனோ

என்ற பயம் உள்ளே,

பயத்தை சாகடிக்க தைரியம் வெளியே,

எழ எழ வீழ்ச்சி,

காலத்தின் சூழ்ச்சி,

தேவன் கைகளின் பொம்மையாய்,

குயவன் கை மண்பாண்டமாய்

வனையப் படுகிறேன்,

சிறகினை கொடுத்துவிட்டு

சிறகை பறித்தால் வலிக்குமா...!

ஓரிறகை பறித்தாலும் 

பறக்க முயலும் பறவையாய்

முயல்கிறேன் நான்,

இதயத்தின் வலுக்கூட்டி

இமயத்தின் வெற்றியைத் தொட,

சோதனை பலவென வந்தாலும் 

சோர்வே இல்லாத இதயம்,

தந்த இறைவனுக்கு நன்றி...!


Ajai Sunilkar Joseph




புதன், 15 ஆகஸ்ட், 2018

உனக்கேது சுதந்திரம்?

உனக்கேது சுதந்திரம்?

முந்தைய கவிதை
👇👇👇👇👇
இனியவள்

டையாளப் படத்தில் 

 அடைத்தான் உன்னை,

 அதில் உன் சகலமும்

 அடைக்க வைப்பான்,

 உனக்கேது சுதந்திரம் ...?


Ajai Sunilkar Joseph 



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இனியவள்

இனியவள்

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇


வள் 
இதழோடு 
இதழ்
இணையும் 
இக்கணம்,
இனியவள்
இவளின் 
இதயத்தில்
இடியோசை 
இசைக்கிறது,
இசையின் 
இறுக்கத்தில்
இனிதே 
இவளிடையில்
இதழ்கள் 
இணைகின்றேன்...


Ajai Sunilkar Joseph 





ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தொடர்கிறேன்...


தொடர்கிறேன்...

முந்தைய கவிதை
👇👇👇👇


ன்னை வர்ணித்து எனக்குக் 

கவிதைகள் எழுதத் தெரியவில்லை,

ஆனால் உன்னைக் கவிதைகளாய் நேசிக்கிறேன்,

எந்தன் கவிதைகளே நீ என்கிறேன்,

உன்னையே தினம் சுவாசம் கொள்கிறேன்,

நீ சுவாசிக்கும் காற்றில் 

என் கவிதைகளை அனுப்பி

உன்னைச் சேர முயற்சிக்கிறேன் ...

ஒன்றாவது உன்னிடம் வந்து

சேர்ந்ததா என்றுத் தெரியவில்லை,

உந்தன் அழைப்பொலியும் என்னிடம் சேரவில்லை,

ஒரு தவறிய அழைப்பும் என் கைப்பேசியில் 

கிடைக்கவில்லை,

அதனால்தான் முடிவு செய்து விட்டேன்,

என் மூச்சுள்ளவரை என் காதலாலும்,

என் கவிதையாலும் உன்னைத் 

தொடர வேண்டுமென்று...

Ajai Sunilkar Joseph


காணொளி