வியாழன், 27 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

உன் நினைவுகள்



ள்ளிரவில் விழித்தெழுந்தேன்,

காரணம்...

                 உன் நினைவுகள்

என்னை ரணங்களாய்

கொல்வது போல உணர்வுகள்...

என் தூக்கம் தொலைத்து

புரண்டு புரண்டு படுத்தும்

என் தூக்கத்தை காணேன்,

தேடிப் பார்க்கிறேன் உன்னை,

கண்ணில் சிக்காமல் நழுவி

விடுகிறாய் ஒவ்வொரு கணங்களும்,

மண்ணில் ஏன் பிறந்தேன்

என்றுத் தோன்றுகையில்,

எனக்குள் வேரூன்றுகிறாய்,

நினைவின் விருட்சமாய்

வளர்ந்தும் விட்டாய் பெண்ணே,

உன்னை நிஜத்தில் காணவே

இமை வாசலைத் திறந்து

காத்திருக்கிறேன்,வந்து

இதயத்தில் நுழைந்து விட்டு

இமைகளை மெதுவாக மூடி விடு.

Ajai Sunilkar Joseph 









2 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!