வெள்ளி, 27 மே, 2016

முதலிடம் பிடித்த கவிதை

முதலிடம் பிடித்த கவிதை








ந்தன் கவிதைப் 
புத்தகத்தில் முதலிடம்
பிடித்த கவிதை நீ தானடி...
உன்னுள் ஓர் நொடி
வாழ்ந்திட வேண்டும்...
அந்த நொடியே ஓர் யுகம் 
ஆகிட வேண்டும்...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 24 மே, 2016

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...







விதைகள் வீசும் 
                         கன்னிப் பூவே...
உந்தன் கண்கள் 
                         பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
                         விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
                         ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
                         உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
                         எந்தன் மூச்சில்...






பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 22 மே, 2016

முத்தழகு மழலை

முத்தழகு மழலை


 துளி உதிரம்
                  சிறு துளியாகி...
கருப்பை சென்று...
                  கர்ப்பம் கொண்டு...
மாதங்கள் சில 
                  மூச்சடக்கி பெத்தெடுத்த
முத்தழகு நீயோ...!










பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 20 மே, 2016

ஒளி இழந்த விழிகள்

ஒளி இழந்த விழிகள்...




ளி இழந்த விழிகளுக்கு
பிழைக்க ஒரு வழி இல்லையே
வழியோரம் பாடுகிறோம்
வயிற்றுப் பிணி போக்கிடவே...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 18 மே, 2016

மீண்டும் மூழ்கடிப்பாளா...!

மீண்டும் மூழ்டிப்பாளா...!









வளின் அழகு விழிகள் கண்டு
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்திட்ட நானும் எழுந்திட
நினைத்தும் மூழ்கடித்தாளே...
அவள் காதல் கரம் தந்து
என்னை தூக்கிடுவாளா...!
இல்லை அவளுக்குள்ளே
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மூழ்கிக் கிடந்தும் கதிரவன் கண்ட
தாமரையாய் மலர்ந்திடுவேனா...!
இல்லை அவளின் நிராகரிப்பால்
அவளுள்ளே மட்கிப் போவேனா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத்  துளிகள்

ஞாயிறு, 15 மே, 2016

உள்ளம் கொள்ளை கொண்டவள்...

உள்ளம் கொள்ளை கொண்டவள்...






அவளது வெட்கம் தந்து 
                            எந்தன் உள்ளம் 
கொள்ளை கொண்டாள்...
                            வெள்ளை உள்ளம் 
தந்து கவிதை ஒன்றை 
                            படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை 
                            தேவதையே உன்னை 
இழுத்தணைத்து உதட்டோரம் 
                            ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
                            வெட்கத்தால் கண்களை 
மூடி எந்தன் மார்பில் 
                            முகத்தை புதைத்துக் 
கொண்டவள் அங்கே
                            என் இதயம் சொன்ன 
கவிதைகளை கேட்டிருப்பாளா...!











Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 10 மே, 2016

தவத்தின் பலன் பொய்யூரா...?

தவத்தின் பலன் பொய்யூரா...?



பத்து மாதம் தவமிருந்தாள்

வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...

அவளின் உள்ளே தவமிருந்தேன்

எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...

தவத்தின் பலனாய் என்னை கண்டு

கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...

மழலை மொழியாய் மொழிந்தேன்

நானும் அவளின் முகத்தை கண்டு...

பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...

அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...

என்னை அவளின் மகன் என்று...









Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 7 மே, 2016

பேனாவின் முத்தங்கள்

பேனாவின் முத்தங்கள்


வெள்ளை காகிதங்களே
              எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
              எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
              துளிகள் ஆனதோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்







(பள்ளிக்கூட சீருடைகள் தைக்கும்
பணிகள் தீவிரமாய் நடப்பதால்
வலையுலக சொந்தங்களே உங்கள் 
பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தந்து
 கருத்துரை இட என்னால் முடியவில்லை 
என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

புதன், 4 மே, 2016

முகநூலில் அவளின் அகநூல்

முகநூலில் அவளின் அகநூல்





முகநூலில் அகங்கள் பரிமாறியே

என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...

இணையத்திலோ இதயங்கள் பேச...

ஒரு முறையாவது நேரில் 

சந்திக்கலாமா என்று சிந்திக்க...

புகைப்படங்களின் பரிமாற்றத்தால்

சிந்தித்த சந்திப்பு கைநழுவ...

இதயங்களுக்கு இதமான நிழல் 

தரும் விருட்சமாய் காதல் வளர...

அந்த நிழலில் தானே அவளை

தேடி தவம் கிடக்கின்றேன்...

அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...

என்னுள் எனக்காய் தவம் கிடக்கும் 

தேவதை அவள்தான் வருவாளா...!

வந்து வரம்தான் அருள்வாளா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்






       




செவ்வாய், 3 மே, 2016

துளியளவு நேசம்

துளியளவு நேசம்...


துளியளவு நேசம் தந்தாள்...
கடலளவு சுவாசம் கொண்டேன்...
இதயக் கடலின் நினைவலையால்
நொடிக்கு ஒருமுறை மோதுகிறாள்...
கரையாய் இருக்கும் என்னை 
கரைத்து அவளில் சேர்த்திடத்தானோ...!
கரைகிறேன் நான் மெல்ல மெல்ல...
அவளுடன் சேர்ந்து வாழ்ந்திடவே...!



Ajai Sunilkar Joseph 
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்