உன் மடியே போதுமடி...
உன்னோடான பொழுதெல்லாம்
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...
உன்னோடான பொழுதெல்லாம்
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...
By...Ajai Sunilkar Joseph
காணொளி