சனி, 17 நவம்பர், 2018

கூர்வாள் விழிகள்

கூர்வாள் விழிகள்


கூர்வாள் விழிகளா உனது
பார்வையால் என்னைக்
கூறு போடுகிறாய்,

உன்னைத் தேடித் தேடித் நானும்
தொலைகிறேன் பெண்ணே
எங்கே இருக்கிறாய்
பதில் சொல் கண்ணே...

உன் ஞாபகம் என்னை
வதைக்கையில் என்
மடிமீது உன்னை வீணையாய்
மீட்ட நினைக்கிறேன்,
ஏன்தான் என்னை சோளக்
கதிராட்டம் வாட்டுகிறாயோ...!

உன்னைக் காதல் மானாய்
ரசிக்கிறேன் நானே
ஏன்தான் என்னை
வெறுக்கிறாய் நீயே...!

உன் விழிகள் விதைத்த
காதலைச் சொல்கிறேன்
கொஞ்சம் புரிந்து கொள்ளடி
என்னை வதைக்காமல்...!


Ajai Sunilkar Joseph


Video




வியாழன், 15 நவம்பர், 2018

அகம் தேடிய அகதி

அகம் தேடிய அகதி



ன் கண்ணிமைகளின் 
சிறகடிப்பில் 
என்னைச் சிறைபிடித்தாய்,

இதழ்களை பிரித்து புன்னகைத்தாய் 
ஓரிரு நொடிகள் உறைந்தே போனேன்,

தாய் காணா சேய் போல்
உன் அகம் தேடி 
உன் விழிகளில் 
அகதியாய் சுற்றித்திரிகிறேன்,

உன் இதயத்தில்
என்னைக் குடியேற்றிக்
காதல் குடியுரிமைக்
கொடுத்து விடு,

இல்லையேல் உன் மனதில் 
என்னைக் கைது செய்து

ஆயுள்கைதியாய் அடைத்து விடு...


Video


புதன், 14 நவம்பர், 2018

காதலுக்குச் சொந்தக்காரி

காதலுக்குச் சொந்தக்காரி




நினைவுகளை அள்ளி
என்னுள் விதைந்தவள்

என் இதயத்தையே
அறுவடையாய் கொய்து
போய் விட்டாள்,

எங்கேதான் போனாளோ
தெரியவில்லை
அவள் சென்ற வழித்தடமும்
புரியவில்லை,

தென்றல் செல்லும்
திசையெல்லாம்
தேடிப்பார்க்கிறேன்,

பூவையவள் போன
திசை தென்றலும்
அறியவில்லையே,

என்னுள் காதலைக்
காவியமாய் தந்தவள்
நெஞ்சுக்குள்
ஓவியமாய் நிற்கின்றாள்,

பவித்திரமான
காதலுக்குச்
சொந்தக்காரி

என்னைக் காத்திருக்கச்
சொல்லிவிட்டு
பவ்யமாய் கடந்துவிட்டாள்,

என் கண்களைத் தாண்டி
கனவுகளாய் என்னைத்
தழுவிச்செல்கிறாள்,

பிறகு ஏன்தான்
என்னைக் கை கழுவிச்
சென்றாளோ
தெரியவில்லை...

Video




சனி, 3 நவம்பர், 2018

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...


நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன் கைகள் கோர்த்து,
உன் தோளோடு உரசி,
சற்றும் இடைவெளி விடாமல்,
கை விரல்களின் இறுக்கத்தில்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னிரு விழிகளிடம்
என் விழிகளால் பேசி,
உந்தன் காதுகளோரம்
கவிதைகளால் பேசி

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னைச் சிறைபிடித்த
பாவையுந்தன் நினைவுகளை
என் பாதையோரம் 
பரப்பி வைத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

பெண்ணே உன்னால் 
என்னில் பல கனவுகளைக்
கண்டெடுத்து என்னையே
நான் மீண்டெடுத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னை நித்தம் 
சித்திரவதை செய்யும்
உந்தன் நினைவுகளைத்
தேடித் தேடி நானும்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னைக் கண்டுபிடித்தும்
தொலைதூரம் மறையும் கானலாய்
நீ மறைந்து விடுவாயோ
என்ற பயத்தாலே நான் தனியாக

நெடுந்தூரம் நடந்து விடுகிறேன்...

Video