இதயங்கள் கர்ப்பம் கொண்டு
கனவுகள் பல கருவாகி
நினைவெனும் மழலை பிறந்ததால்...
அவள் நெஞ்சில் ஆட வைத்தேன்
பஞ்சணையில் தலை சாய்க்க
நெஞ்சணையில் அணைத்துக் கொண்டாள்...
மாதங்கள் சில மூச்சடக்கி
கருவினில் வாழ்ந்த உன்னை
என் மகனாக அறிமுகம் செய்தாள்...
உன்னை கருவில் சுமந்தாள்
நம்மை அவள் சுமந்ததால்
இருவருக்கும் தாயாகிப் போனாளே...