துயில் கொள்ளப் போனாயோ...?
முந்தைய கவிதை
👇👇👇👇👇
ஏங்கிநின்றேன்,
எங்கெங்கோ
தேடிப்பார்த்தேன்,
முகிலின் மடியில்
தேடிப்பார்த்தேன்,
தொடுவான எல்லைத்
தாண்டிப்பார்த்தேன்,
கிணற்றின் அடியில்
எட்டிப்பார்த்தேன்,
குளத்தில் கொஞ்சம்
மூழ்கிப்பார்த்தேன்,
நான் தேடாத
இடமுமில்லை,
தேடிப்பார்த்த
தடமுமில்லை,
கண்ணெட்டும்
தூரம் தேடுகிறேன்,
இருள் வான் மட்டும்
காண்கிறதே...!
தொலை தூரம்
நின்றே தேடுகிறேன்,
நீயும் தொலைந்தே
போனாய் என்றதினால்,
உன்னைக் காணா
ஏக்கமதில்
தூக்கமில்லை
கண்களிலே,
என் தூக்கமெல்லாம்
கலைத்துவிட்டு
துயில்கொள்ளப்
போனாயோ வெண்ணிலவே...!
![]() |
| Ajai Sunilkar Joseph |
By...Ajai Sunilkar Joseph

