துயில் கொள்ளப் போனாயோ...?
முந்தைய கவிதை
👇👇👇👇👇
ஏங்கிநின்றேன்,
எங்கெங்கோ
தேடிப்பார்த்தேன்,
முகிலின் மடியில்
தேடிப்பார்த்தேன்,
தொடுவான எல்லைத்
தாண்டிப்பார்த்தேன்,
கிணற்றின் அடியில்
எட்டிப்பார்த்தேன்,
குளத்தில் கொஞ்சம்
மூழ்கிப்பார்த்தேன்,
நான் தேடாத
இடமுமில்லை,
தேடிப்பார்த்த
தடமுமில்லை,
கண்ணெட்டும்
தூரம் தேடுகிறேன்,
இருள் வான் மட்டும்
காண்கிறதே...!
தொலை தூரம்
நின்றே தேடுகிறேன்,
நீயும் தொலைந்தே
போனாய் என்றதினால்,
உன்னைக் காணா
ஏக்கமதில்
தூக்கமில்லை
கண்களிலே,
என் தூக்கமெல்லாம்
கலைத்துவிட்டு
துயில்கொள்ளப்
போனாயோ வெண்ணிலவே...!
![]() |
Ajai Sunilkar Joseph |
By...Ajai Sunilkar Joseph
வெண்ணிலா கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஹ ஹா தங்கள் வருகைக்கும்
நீக்குகருத்துரைக்கும் நன்றிகள் பல ...
மேகத்தந்தை முகிலாடையால் நிலாமகளை மறைத்து வைத்திருக்கிறான் போலும்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குநன்று. பாராட்டுகள் அஜய்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா..!
நீக்குஅருமை..
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குஅருமை... "நிலவும் நீயும் நானும்" என்ற எனது இரு தொகுப்புகளையும் பதிவிறக்கம் செய்து படித்து உங்கள் கருத்துக்களையும் பகிரவும்..
பதிலளிநீக்குஇதோ வருகிறேன் நண்பரே...
நீக்குகவிதையை மிகவும் இரசித்தேன் நண்பரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குமுகிலின் மடியில்
நீக்குதேடிப்பார்த்தேன்,
தொடுவான எல்லைத்
தாண்டிப்பார்த்தேன், மனத்தைத் தொட்ட வரிகள்
அபயா அருணா நட்புக்கு வணக்கம்...!
நீக்குதங்களின் முதல் வருகையென நினைக்கிறேன்.
தங்களது கருத்துரைக்கும் ,வருகைக்கும்
நன்றிகள் பல...!
அருமை
பதிலளிநீக்குநன்றி சகோ...
நீக்கு