வெற்றி நிச்சயம்...!
பயணமோ வெகுதூரம்,
பாதையோ தெரியவில்லை,
பாய்மரங்கள் ஏதுமில்லை,
போட வேண்டும் எதிர்நீச்சல்...!
சாதிக்க நீ நினைத்தால்
சாதிகளை தூக்கிலிடு,
சதிகளை நாம் நினைத்தால்
விதிகளை யார் ஜெயிப்பார்...?
கூச்சலிடத் தேவையில்லை,
கூக்குரலும் தேவையில்லை,
தடைகளை உடைத்தெறிந்தால்
படைகளை ஜெயித்திடலாம்...!
நல்வினை நீ செய்தால்
தீவினைச் சேருமிங்கே...
கரடும் முரடும் பாதையிங்கே,
எதற்கு மனிதா போதையிங்கே....?
வெற்றியென்றால் மேல்படி,
தோல்விதானே முதல்படி,
துணிந்தால் ஏறிடலாம்,
ஏணியாய் எழுந்திடலாம்...!
By...Ajai Sunilkar Joseph
வருகைத்தந்து கவிதையை
ரசித்தமைக்கு
மனமார்ந்த
நன்றிகள்...!!!
கருத்துரைகள் தந்தால்
தவறேதும் இருந்தால் என்னை
திருத்திக்கொள்ள
உதவும் நண்பர்களே...
