ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பார்வையால் போர்த் தொடுக்கிறாள்...




ன் இதயத்தை
கொத்தாய் பிய்த்தெடுக்க
பார்வையால் போர்த்
தொடுத்தவளே...!

என் இதயத்தின்

மென்மையை அறியாத
பெண்மை யா உனது...!

என் இதய பூமியின்

சாமியே நீதானடி...
பெண்ணே...!

உன்னையே ஆராதிக்கும்

பக்தனாய் நான் இருக்க,
ஏனடி என்னை
பித்தனாய் மாற்றினாய்...?

என் மேல் சினம்

கொண்ட சினேகிதியே
உன்னை மணம் கொண்டால்
தீருமோ இந்த தண்டனை...?

உன் தணியா கோபத்தை

உன் அன்புக்குப் பணிந்த
என்மேல் ஊற்றாதே,

சிறு சிறு கவிதைகளாய்

என்னில் ஊற்றெடுக்கும்
தூயவளே

உன் பார்வை தீயை 

ஊற்றி என் காதலை
கொஞ்சம் எரிய விடு...!



Video




3 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!