சனி, 17 நவம்பர், 2018

கூர்வாள் விழிகள்

கூர்வாள் விழிகள்


கூர்வாள் விழிகளா உனது
பார்வையால் என்னைக்
கூறு போடுகிறாய்,

உன்னைத் தேடித் தேடித் நானும்
தொலைகிறேன் பெண்ணே
எங்கே இருக்கிறாய்
பதில் சொல் கண்ணே...

உன் ஞாபகம் என்னை
வதைக்கையில் என்
மடிமீது உன்னை வீணையாய்
மீட்ட நினைக்கிறேன்,
ஏன்தான் என்னை சோளக்
கதிராட்டம் வாட்டுகிறாயோ...!

உன்னைக் காதல் மானாய்
ரசிக்கிறேன் நானே
ஏன்தான் என்னை
வெறுக்கிறாய் நீயே...!

உன் விழிகள் விதைத்த
காதலைச் சொல்கிறேன்
கொஞ்சம் புரிந்து கொள்ளடி
என்னை வதைக்காமல்...!


Ajai Sunilkar Joseph


Video




9 கருத்துகள்:

  1. "உன் ஞாபகம் என்னை
    வதைக்கையில் என்
    மடிமீது உன்னை வீணையாய்
    மீட்ட நினைக்கிறேன்!" என
    அருமையாகச் சொன்னீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. கூர்வாள் மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. காதலாகிக் கசிந்து... தொடருங்கள் வாழ்வை..

    கூர்வாள் விழிகளால் - என எழுத நினைத்தீர்களோ என்ற ஐயம் எனக்கு..

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!