புதன், 14 நவம்பர், 2018

காதலுக்குச் சொந்தக்காரி

காதலுக்குச் சொந்தக்காரி




நினைவுகளை அள்ளி
என்னுள் விதைந்தவள்

என் இதயத்தையே
அறுவடையாய் கொய்து
போய் விட்டாள்,

எங்கேதான் போனாளோ
தெரியவில்லை
அவள் சென்ற வழித்தடமும்
புரியவில்லை,

தென்றல் செல்லும்
திசையெல்லாம்
தேடிப்பார்க்கிறேன்,

பூவையவள் போன
திசை தென்றலும்
அறியவில்லையே,

என்னுள் காதலைக்
காவியமாய் தந்தவள்
நெஞ்சுக்குள்
ஓவியமாய் நிற்கின்றாள்,

பவித்திரமான
காதலுக்குச்
சொந்தக்காரி

என்னைக் காத்திருக்கச்
சொல்லிவிட்டு
பவ்யமாய் கடந்துவிட்டாள்,

என் கண்களைத் தாண்டி
கனவுகளாய் என்னைத்
தழுவிச்செல்கிறாள்,

பிறகு ஏன்தான்
என்னைக் கை கழுவிச்
சென்றாளோ
தெரியவில்லை...

Video




6 கருத்துகள்:

  1. காணொளியும் அருமையான உள்ளது... உங்களின் குரலா...?

    பதிலளிநீக்கு
  2. நல்ல காணொளியில் நல்ல கவிதை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் ஒரு அருமையான் படைப்பு... தொடரட்டும் பயணம்...
    காதலையும் தாண்டி எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!