ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பிரியமானவளே உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

பிரியமானவளே...
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

ன்னிதயத்தின் பிரியமானவளே
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...
நான் நலமாகத்தான் இருந்தேன்,
நீ என்னை விட்டுப் பிரியும் வரை...
நீ என்னைப் பிரிந்து என்னுள்ளே
என்னை சிந்திக்க வைத்தாய்,
அளவுக்கு அதிகமான அன்பு
வைத்தால் என்னவாகும் என்று...
நீ என்னைப் பிரிந்த நாள்முதல்
என்னுயிரும் என்னைப் 
பிரிந்த உணர்வுகள் எனக்குள்...
இதயமே நீயும் என்னை
விட்டு பிரிந்து விடு,
நீ இருந்ததினால் தான் அவளை 
என்னுயிராய் காதலித்தேன்...
அவளே பிரிந்து போன பிறகு
நீ மட்டும் எதற்கு...?
வலிகளை சகித்துக் கொள்ளவா...?
தயவு செய்து என்னைப்
பிரிந்து விடு இதயமே...!
நான் நிம்மதியாக என் 
கல்லறைக்கு போவேன்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


திங்கள், 11 செப்டம்பர், 2017

வித்தகத்தி உன் நினைவால்...

வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி...


ன்னைத் தனிமையில் 
வதைக்கும் உன் நினைவை...
என் கனவாய் நான் ரசித்து,
நித்தம் அதை நினைத்து, 
பித்தம் எனைப் பிடித்து...
வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி,
என் கண்ணழுத கண்ணீரை,
உன் காலடியில் நான் தெளித்து,
விண்ணோடு நான் சேர
என்னை மண்ணோடு புதைத்தேனோ...!
உயிரென்ற ஒருசொல்
உனையென்றும் சுற்றி வர
இங்கேயே விட்டுச் செல்கிறேன்...
மீண்டும் ஒரு ஜனனம் என்றால்
என் மரணம்வரை நீ வேண்டும்...
மாறாத மனதோடும்,
மறவாத நினைவோடும்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி