செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இரக்கமே இல்லாத விழிகள்

இரக்கமே இல்லாத விழிகள்


நான் விண்ணில் பார்த்த 
விண்மீன்களுக்கு இல்லாத சிறப்பு,
தரணியில் பார்த்த 
தாரணியுந்தன் கண்களில் இருக்கிறது ...
உன் பார்வை உதிர்க்கும் 
ஈர்ப்பு சக்தியால் எத்தனை இதயங்கள் 
சின்னாபின்னமானதோ தெரியவில்லை,
துளியளவும் மிச்சம் வைக்காமல்
இதயங்களை தின்று ஏப்பமிடும் 
கண்களை உனக்கு மட்டும்தான்
இறைவன் கொடுத்துவிட்டான் போல...!
சித்திர விழியழகே உன்னை
நினைக்கையில் என் நித்திரை 
கெட்டுப் போகுதடி...
இரக்கமே இல்லாத உன் விழிகளை 
மறக்கவே முடியாமல் தவிக்கிறேன் நானடி...!
By...Ajai Sunilkar Joseph


Video




ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

அவள் தந்து சென்ற கவிதைகள்

அவள் தந்து சென்ற கவிதைகள்



ன்பான என் தேவதை,
அவளுக்கோ அழகான புன்னகை,
அவளும் , அவள் புன்னகையும்
என் இதயத்தை புண்ணாக்கி
என்னை ரணங்களாய் ஆள்கிறது...
என் கண்களில் அவள் 
காணாமல் போன நாள்முதல்,
என் இதயம் அழுத வார்த்தைகளை
அவளின் ஞாபகத்தில் எழுதிக் கொட்டுகிறேன்,
என் இதயத்தின் வாசகியவள்
எங்கே சென்றாளோ தெரியவில்லை,
என் கண்களை விட்டு மறைந்தாளா...?
அவளை விட்டு நான் மறைந்தேனா...?
ஏதும் புரியவில்லை...
அவள் நினைவுகளை சுவாசித்து
அவளிடம் கவிதைகளால் யாசித்து
நானே வாசித்து விடுகிறேன் 
அவள் தந்து சென்ற கவிதைகளை...

By...Ajai Sunilkar Joseph 


காணொளி



திங்கள், 2 ஏப்ரல், 2018

மை விழியாள்...

மை விழியாள்...

ன் உயிரை ஊசலாட  
விட்டு எங்கே சென்றாய்...!
திரும்பித் திரும்பி உன்னைத்
திரும்பத் திரும்பத் தேடுகிறேன்,
விரும்பி என்னைப் பார்த்தாலென்ன
மையல் தந்த மைவிழியாளே...!
கண்ணில் காட்சி தந்து 
என் கண்ணை விட்டு 
மறைந்தாயே என் தேவதையே...!
என் தேவையெல்லாம் உன் 
அன்பே என் ஆருயிரே,
நீ சென்ற திசையெல்லாம் தேடுகிறேன் 
எங்கே இருக்கிறாய் என்று...!
சொல்லி விடு ஒரு வார்த்தை
என் தேடலின் வலிகளை
தவிர்த்து காத்திருப்பேன் உனக்காக...


By...Ajai Sunilkar 



காணொளி....