செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இரக்கமே இல்லாத விழிகள்

இரக்கமே இல்லாத விழிகள்


நான் விண்ணில் பார்த்த 
விண்மீன்களுக்கு இல்லாத சிறப்பு,
தரணியில் பார்த்த 
தாரணியுந்தன் கண்களில் இருக்கிறது ...
உன் பார்வை உதிர்க்கும் 
ஈர்ப்பு சக்தியால் எத்தனை இதயங்கள் 
சின்னாபின்னமானதோ தெரியவில்லை,
துளியளவும் மிச்சம் வைக்காமல்
இதயங்களை தின்று ஏப்பமிடும் 
கண்களை உனக்கு மட்டும்தான்
இறைவன் கொடுத்துவிட்டான் போல...!
சித்திர விழியழகே உன்னை
நினைக்கையில் என் நித்திரை 
கெட்டுப் போகுதடி...
இரக்கமே இல்லாத உன் விழிகளை 
மறக்கவே முடியாமல் தவிக்கிறேன் நானடி...!
By...Ajai Sunilkar Joseph


Video




8 கருத்துகள்:

  1. "கரு நெடுங்கண் தரு காம நோயே" என்ற தொடர் நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!