திங்கள், 29 ஜனவரி, 2018

கோடி மின்னல்கள் குடி கொண்ட கண்கள்....

கோடி மின்னல்கள்
குடி கொண்ட கண்கள்...


கோடி மின்னல்கள் கூடி வந்து
உன் கண்களில் குடி கொண்டதோ...!
பெண்ணே...!
                     உன் விழி பார்த்து 
என் வழி மறக்கின்றேன்,
கண்ணே...!
                 உன் இரு விழி,
உன் இமை வழி,
என்னிரு விழி நுழைந்து,
என் இதயத்தில்  காதல் கருவானதே...!
கண்ணால் கண்ணில் மாயம் செய்து,
உன்னால் என்னில் மாற்றம் செய்த நீயோ
மாயலோக சுந்தரியா...?
நீதான் மெய் தேவதையா...?
புரியாத எனக்கோர்
பதில் கூறடி கண்மணியே...!


By...Ajai Sunilkar Joseph


காணொளி



புதன், 10 ஜனவரி, 2018

என் காதலின் வேரடி...

என் காதலின் வேரடி...


விட்டு விட்டுத் 
துடிக்கும் என் நெஞ்சம் 
விட்டெறிந்த உன்னை
விடாமல் நினைக்குதடி...
நள்ளிரவு நேரம்
கிள்ளியெழச் செய்து,
கண்ணில் கொஞ்சம்
காதலைக் கெஞ்சுதடி...
இதயத் துடிப்பினை நிறுத்தி
மூச்சு முட்டச் செய்யுதடி,
புரண்டுருண்டு படுத்தால்
என்னை புரட்டிப் போட்டு கொல்லுதடி...
நான் தந்த வலியோ 
என்னை நரகத்தில் தள்ளுதடி,
கத்தியெறிந்த என் நாவோ
புத்தி கெட்டுப் போனதடி...
உன் காலடி நான் கண்டால்
என் காதலின் வேரடியில்
சரணடைந்து போவேன்டி...

காணொளி


Ajai sunilkar Joaeph