பூமியுள்ள காலமெல்லாம் சாமியாய்
இமைக்குள் விழிபோல்
இரவும்,பகலும் என்னை
காத்த உன்னைப்போல்
இங்கே வேறாருத் தாயே...!
விழுந்த ஒரு துளி மழைநீரை
முத்தாய் காத்த சிப்பி போல்,
உனக்குள் வீழ்ந்த ஒருதுளி
உதிரத்தை இரத்தமும்,
சதையுமாய் உருகொடுத்து,
உந்தன் சுவாசத்தையே
உயிராய் கொடுத்த உன்னை
எப்படி காப்பேனோ...!
பூமியுள்ள காலமெல்லாம்
சாமியாய் வணங்கினாலும்
என்னைப் பெற்ற கடன் தீராதே...!
எனக்கான ஜென்மங்கள்
எத்தனையோ அத்தனை
ஜென்மங்களும் நீயே வேண்டும்
எனக்கே குழந்தையாக...
வரம்கொடு தாயே உன்னையே
நான் மீண்டும் பெற...!
என்னைக் கருவில் சுமந்த
அன்னையே உன்னை தினமும்
சுமக்கும் பாக்கியம் கொடு...
இமைக்குள் விழிபோல்
இரவும்,பகலும் என்னை
காத்த உன்னைப்போல்
இங்கே வேறாருத் தாயே...!
விழுந்த ஒரு துளி மழைநீரை
முத்தாய் காத்த சிப்பி போல்,
உனக்குள் வீழ்ந்த ஒருதுளி
உதிரத்தை இரத்தமும்,
சதையுமாய் உருகொடுத்து,
உந்தன் சுவாசத்தையே
உயிராய் கொடுத்த உன்னை
எப்படி காப்பேனோ...!
பூமியுள்ள காலமெல்லாம்
சாமியாய் வணங்கினாலும்
என்னைப் பெற்ற கடன் தீராதே...!
எனக்கான ஜென்மங்கள்
எத்தனையோ அத்தனை
ஜென்மங்களும் நீயே வேண்டும்
எனக்கே குழந்தையாக...
வரம்கொடு தாயே உன்னையே
நான் மீண்டும் பெற...!
என்னைக் கருவில் சுமந்த
அன்னையே உன்னை தினமும்
சுமக்கும் பாக்கியம் கொடு...
By...Ajai Sunilkar Joseph
அன்னையர்தின வாழ்த்துகளுடன்